Thursday, December 15, 2005

114. Letter to the Editor




The Hindu -க்கு இரண்டு கடிதம் எழுதிப்போட்டு,அதை அவர்கள் பதிப்புக்குத் தேர்ந்தெடுக்கவில்லை என்றதும், நம் சொந்த பதிப்பகம்தான் இருக்கிறதே என்று தோன்றியதாலும், நமக்குன்னு படிக்கிறதுக்கு நாலு பேரு இருக்க மாட்டார்களா என்ற நம்பிக்கையிலும் இங்கே பதிகிறேன்.



To
The Editor
The Hindu
Madurai

Sir,
Many have expressed a great shock over the expose’ of the sting operation, Operation Duryodhana. It is not surprising at all, if one has come to understand and accept what our politicians are. Don’t we all know that these politicians take up politics as their serious full-time profession and they would stoop down to any level for money in this ‘noble profession’ of theirs? Don’t we know the sole aim of our politicians is to go for fast bucks at the shortest period. They know pretty well that there may not be a ‘tomorrow’ and they make hay when the sun shines.

xxx xxx xxx xxx

To
The Editor
The Hindu
Madurai

Sir,
Appeasing the monorities, I assumed, is only in our country. Sorry to find the same in U.S., and U.K. too. The article (Celebrating Christmas by other names) by Hasan Suroor on 14th Dec shows how religions play havoc with peoples’ psyche all over the world. It is not as simple as it looks. This is nothing less than the symptom of paranoa that has crept into human mind, a sure sign of one of the after-effects of 9/11.

14th Dec ‘05






Dec 15 2005 08:41 pm | ஊடகங்கள் | | edit this
2 Responses
துளசி கோபால் Says:
December 16th, 2005 at 12:30 am e
புது டிசைன் நல்லா இருக்கு. உங்க மகளை உடனே இங்கே அனுப்பி வையுங்க. எனக்கும் இன்னும் வேற வேற டிசைன்களிலே டெம்ப்ளேட் மாத்தணும்:-))))

மகாபாரதம் ராமாயணம் இதெல் எல்லாம் லட்சக்கணக்கான பெயர்கள் இருக்கு. அதுலே இருந்து ஒவ்வொண்ணா எடுத்து விட்டுக்’கலாம்’.

தருமி Says:
December 16th, 2005 at 11:00 am e
அனுப்பிட்டா போகுது…டிக்கெட் மட்டும் அனுப்பிச்சிடுங்க!!

Friday, December 09, 2005

113. A PHOTO-FINISH...!

வேறு ஒண்ணுமில்லை...நானும் என் பேரனும் எங்க சின்ன வயசில சந்திச்சிக்கிட்டோம். அப்படி சந்திச்சிக்கிட்டத ஒரு படமா எடுத்து வச்சிக்கிட்டா posterity-க்கு நல்லா இருக்குமேன்னு என் பேரன் ஒரு ஐடியா கொடுத்தான். பேரன் சொன்னா தட்ட முடியுமா என்ன..? அதனால நாங்க ரெண்டு பேருமா சேர்ந்து ரெண்டு படம் எடுத்துக்கிட்டோம். அதான் உங்ககிட்ட அத காமிக்கலாமேன்னு நினச்சேன்....


Thursday, December 08, 2005

112. தல புராணம்…6

சாயுங்கால வேளைகள் பொதுவாக காலேஜ் ஹவுஸ் முன்னால்தான் என்றாலும், போரடிக்கக்கூடாதென்பதற்காக அவ்வப்போது அப்படியே காலாற நடந்து மேற்குக்கோபுரம், தெற்குக் கோபுரம், கிழக்குக் கோபுரமும் தாண்டி, அந்தப்பக்கம் அந்தக் காலத்தில் இருந்த மெட்ராஸ் ஹோட்டலில் போய் ஒரு சமோசாவும், டீயும் அடிச்சிட்டு மறுபடியும் வந்த வழியே திரும்பவும் நம்ம குதிரை நிக்கிற இடத்துக்கு வர்ரது ஒரு வழக்கம். அவ்வளவு தூரம் நடக்கச் சோம்பேறித்தனமான நாட்களில் மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்னால் அப்போதிருந்த பாதைகளின் பக்கவாட்டில் போடப்பட்டிருக்கும் சிமெண்ட் கிராதிகளின்மேல் உட்கார்ந்து கொண்டு…ம்..ம்ம்…என்ன இனிய நேரங்கள்; என்ன பேசினோம்; எதைப்பற்றிப் பேசினோம் என்றெல்லாம் யாரறிவார்?


தெற்குக் கோபுரத்தின் உச்சியிலிருந்து….



…………..கோயிலின் உட்பக்கம்..

ரொம்பவே ஸ்பெஷலான நாட்களில், காலேஜ் ஹவுஸ் உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் இருக்கும் கடையில் சில ஸ்பெஷலான ஐட்டங்கள் இருக்கும்; பயந்திராதீங்க. அந்தக் கடையில் எல்லா magazines and newspapers கிடைக்கும். அவ்வப்போது வேறு வேறு பத்திரிக்கைகள், செய்தித்தாட்கள் வாங்குவதுண்டு. அதோடு, எல்லா foreign brand சிகரெட்டுகளும் கிடைக்கும் என்பது இன்னொரு விசேஷம். மறைந்து மறைந்து குடித்த நாட்களில் ஒரு பிராண்டும், அதற்குப் பின் வேறு ஒரு பிராண்டும் நமது ஃபேவரைட். அந்த முதல் ஃபேவரைட்: மார்க்கோபோலே-ன்னு ஒரு சிகரெட். வித்தியாசமா இருக்கும்; ப்ரெளண் கலர்; சப்பையா, ஓவல் வடிவில் இருக்கும்; வாசனை பயங்கர சாக்லெட் வாசனையா இருக்கும். எப்படியும் வருஷத்தில் இரண்டு மூன்று தடவை இந்த ஸ்பெஷல் சிகரெட். இதே மாதிரி - a poor man’s version of Marco Polo - Royal Yacht என்றொரு சிகரெட். அதே கலர்,வாசனை, சுவை…! இந்த ஸ்பெஷல் ஐட்டங்களை வாங்கிட்டு, மதுரை ரயில்வே ஸ்டேஷன் உள்ளே போய் - அப்பல்லாம் பிளாட்பார்ம் டிக்கெட் உண்டா இல்லையா என்றே தெரியாது -ஏதோ ஒரு ஒதுக்குப்புறத்தில் உட்கார்ந்து, பயந்து, ரசிச்சி…..ம்..ம்ம்..அது ஒரு காலம்! பயம் போன பிறகு ஃபேவரைட் ப்ராண்ட் மார்ல்போரோ சிகரெட்தான்…ஆடிக்கொண்ணு அம்மாவாசைக் கொண்ணுன்னு…




………..தெற்குக் கோபுரத்தின் உச்சியிலிருந்து..

பறவைப் பார்வையில் மதுரை….........


அந்த சாயுங்கால ஊர்சுற்றல்களில் அந்தக் கோயில் கோபுரங்களைத் தாண்டும்போதெல்லாம் அதன் உச்சிக்குச் செல்ல நினைத்ததுண்டு; ஆனால், அது நிறைவேற ஆண்டுகள் பல காத்திருக்க வேண்டியதாயிற்று.காமிரா கிறுக்கின் உச்ச நிலையில் கோயிலின் உள்ளும் புறமும் எடுத்தபிறகு, தெற்குக் கோபுரத்தின் மேல் ஏறுவதற்கு உத்தரவு வாங்கி, நண்பன் ரவியோடு கோபுரத்தின் உச்சிக்குப் படம் எடுக்கச் சென்றோம். பொன்னியின் செல்வனை அந்த வயதில் படித்த அனைவருக்குமே இருக்கும் ஒரு சாகச உணர்வு. ஏதோ பாண்டியர் காலத்திற்கே சென்று விட்டது போன்ற நினைப்பு. அந்தக் காலத்து குடிமக்கள் எல்லாம் நினைவில் வருவதில்லை; ராஜ குமாரர்களும், குமாரத்திகளும்தான் நினைவில். அசப்பில மணியனின் குந்தவி பிராட்டி நம்முடனே நடந்து வர்ர மாதிரி நினைப்புல மேல ஏறினோம். மேலே போனா கோபுரத்தின் உச்சியில் தெரியும் அந்த கலசங்களுக்கு நடுவில் ஓர் ஆள் நுழையும் அளவிற்கு துவாரங்கள். கலசங்களுக்கு இரு புறமும் அந்தப் பெரிய பூத கணங்களின் முட்டைக் கண்களும், நீண்டு வளைந்த பற்களும்..அம்மாடியோவ்! அதுவும் dead close-up…!



ரவியும், உடன் வந்த இன்னொரு நண்பனும் ரொம்ப சாதாரணமாக அதன் வழியே வெளியே சென்று, கோபுரத்தின் உச்சியின் மேல், வெளியே - open space-ல் - நின்றார்கள்.(top of the world ?) அதை நினைத்துப் பார்க்கையில் எனக்கு இப்போது கூட அடிவயிற்றில் அட்ரீனலின் சுரப்பதை உணர முடிகிறது. அதென்னவோ, உயரமான இடங்களின்மேல் ஏறி நின்றாலே இந்த அட்ரீனலின் தன் வேலையைக் காண்பிக்கும். இதுதான் vertigo-வா என்று தெரியாது. அட போங்கப்பா, நான் வெளியில் வரமாட்டேன்னு சொல்லிட்டு, இரண்டே இரண்டு படம் எடுத்தேன். ஒன்று அங்கிருந்து கோயிலின் உட்புறம் நோக்கி; இன்னொன்று கீழ் நோக்கி மதுரையை எடுத்தேன். (இங்கே இருக்கும் படங்கள்தான் அவைகள்). ரவி நிறைய எடுத்தான்.

இந்த எபிசோட் முடிந்த சின்னாட்களில் இதே கோபுரத்தின் உச்சிக்குச் சென்று, மேலே ஏறி, வெளியே நின்று, குதித்து, கோயிலின் உட்புறம் கல் வேயப்பட்ட ஆடிவீதியில் விழுந்து ஒரு இளைஞன் தற்கொலை செய்துகொண்ட பிறகு இந்தக் கோபுரத்தில் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக அறிந்தோம்.

Dec 08 2005 06:20 pm | சொந்தக்கதை.. | | edit this
Rate this post at www.thamizmanam.com
இதுவரை விழுந்த "உள்குத்து" நிலைமை பாருங்க!!??:
(இதுவரை 2 பரிந்துரைகள்)

ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
5 Responses
குமரன் Says:
December 8th, 2005 at 8:06 pm e
தருமி ஐயா, இதெல்லாம் எனக்கு நினைவு தெரிஞ்ச நாட்களுக்கு முன்னால நடந்திருக்கும்னு நெனைக்கிறேன். ஏன்னா எங்களை எல்லாம் கோபுரத்துல ஏற யாரும் விட்டதில்ல.

மெட்ராஸ் ஓட்டல் எனக்கு தெரிஞ்சு T.M. கோர்ட்ல (மேலமாசி வீதி, தெற்குமாசி வீதி முக்கு) தான் இருந்துச்சு. சிக்கன் பிரியாணிக்கும் சிக்கன் சாப்ஸ்க்கும் ரொம்ப பேமஸ் (எனக்கு இது ரெண்டும் அந்த ஓட்டல்ல பிடிக்கும். அதனால பேமஸ்ன்னு போட்டாச்சு). நீங்க அந்த ஓட்டலத்தான் சொல்றீங்களா?

தருமி Says:
December 8th, 2005 at 9:31 pm e
“எங்களை எல்லாம் கோபுரத்துல ஏற யாரும் விட்டதில்ல. “//
- அதனாலதான குமரன் இந்தப் பதிவு.
இறந்த பையன்கூட நண்பன் ஒருவனுக்குத் தெரிந்தவரின் தம்பி.
நீங்க சொல்ற மெட்ராஸ் ஹோட்டல் தெரியும். அதுக்குப் பக்கத்தில தான் நான் முந்தி சொன்ன பேமஸ் இட்லிக்கடை இருந்தது. இன்னொரு மெட்ராஸ் ஹோட்டல் நான் சொல்ற இடத்தில், செண்ட்ரல் மார்க்கெட் பக்கம் உயரமான படிக்கட்டோடு இருக்கும்.

பல்லவி Says:
December 8th, 2005 at 9:56 pm e
உம் மதுரையை நினைத்தால் ஞாபகம் வருவது கோபுரங்களும்,கோயில் கடை வீதியும் தான்.அப்புறம் இந்த தமுக்கம் மைதானம் பக்கத்தில் இருக்கும் நகராட்சி பூங்காவில் இருக்கும் பிள்ளையார் கோவிலும் கொஞ்ஞம் தள்ளி இருக்கும் பெருமாள் கோவிலும் தான்.உங்கள் பகுதியில் பழைய நினைவுகளை அலசுகிறீர்கள்.நடக்கட்டும்!

ivarugala Says:
December 9th, 2005 at 2:11 am e
இப்பக்கூட அந்த தருணத்தை நினைத்தால் புல்லரிக்குதுங்க தருமி.

தருமி Says:
December 9th, 2005 at 9:44 pm e
ivarugala என்ற அழகுரவிப் பையா,
வேற ஏதாவது முக்கியமான விஷயம் விட்டுப் போயிருந்தா எடுத்துக் கொடு; சரியா…?

Sunday, December 04, 2005

111. தருமின்னா கேள்வி…கேள்வின்னா தருமி !

ரஜினி ராம்கியின் இரண்டாம் ஆண்டு நிறைவுப் பதிவுக்குப் போய் - “நீங்கள்லாம் பழந்தின்னு கொட்டை போட்ட ஆளுங்க“ன்னு சொல்லி -ஒரு பின்னூட்டம் விட்டேனா.. அதில ஒரு கேள்வி இப்போ.

அது எப்படி பழம்தின்னு கொட்டை போட்ட ஆளுன்னா ரொம்ப முத்தின கேசு..much experienced ஆளுன்னு அர்த்தம் வரும்? இப்போ பழம் இருக்கு; அத ஒருத்தர் தின்னுடறார்; கொட்டையைக் கீழே கடாசுறார். எல்லாமே ரொம்ப சின்ன, சாதாரணமான காரியம்தானே; இதிலெங்கே திறமை / experience / வேற சிறப்பு இருக்கு? புரியலைங்களே!

அதுக்குப் பதிலாக, “கொட்டை போட்டு பழம் தின்னவர்” என்றால் நிறைய பொருள் இருக்கே. அது என்னனனா, ஒருத்தர் கொட்டையைப் போடுறார்; அதாவது, கொட்டையை ஊன்றி, செடியாக்கி, மரமாக்கி, பூக்க வைத்து, காய்க்க வைத்து, பழுக்க வைத்து……….அதுக்கப்புறம் அவர் தானே வளர்த்து உருவாக்கிய அந்தத் தருவின் பழத்தை தின்றால் - அது ஒரு பெரிய விஷயம் இல்லையா?

அப்டின்னா, “பழந்தின்னு கொட்டை போட்ட ஆளு”ன்னு சொல்றதில ஒரு பொருளும் இல்லையே; அதுக்குப் பதிலா, “கொட்டை போட்டுப் பழம் தின்னவர்” என்பதுதானே சரியாக இருக்கும்.

மக்களே, இதனால் உங்கள் அனைவருக்கும் தருமி தெரிவிப்பது என்னவெனில்…மன்னருக்கு மட்டும்தான் சந்தேகம் வரணுமா என்ன? இப்போ தருமிக்கே சந்தேகம். தனியொருவராக வந்து யாரேனும் இந்தச் சந்தேகத்தைத் தீர்த்துவைத்தால் அவர்களுக்கு ஆயிரம் *_____ கொடுக்கப்படும்….

* தருமி இதை என்னவென்று பின்னால் முடிவு செய்வார்.

Dec 04 2005 03:12 pm | அவியல்... | | edit this
Rate this post at www.thamizmanam.com
இதுவரை விழுந்த "உள்குத்து" நிலைமை பாருங்க!!??:
(இதுவரை 5 பரிந்துரைகள்)

ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
23 Responses
சத்யா Says:
December 4th, 2005 at 4:26 pm e
நா இன்னும் கொட்டைய கீழ போடல…போட்டுட்டு சொல்றன்.

நன்றி!
சத்யா

சத்யா Says:
December 4th, 2005 at 5:02 pm e
இங்க வந்தா தெரியும்!

நன்றி!
சத்யா

Dondu Says:
December 4th, 2005 at 5:07 pm e
“நீங்கள்லாம் பழந்தின்னு கொட்டை போட்ட ஆளுங்க”

வேப்பம் பழத்தைத் தின்று கொட்டையை எச்சமாக இடும் காகம். அவ்வாறு அக்காகத்தின் ஜீரண உறுப்புகள் வழியாக மறுபடியும் தரைக்கு வரும் அக்கொட்டை அமோகமாக விளையும்.

அதே போல ஒருவர் தான் உட்கொண்டதை ஜீரணித்து வெளியே தரும் கருத்துக்கள் புடம் போட்டது போல பிரகாசிக்கும். அவ்வாறு செய்பவர்கள் மிகவும் அனுபவசாலிகள் என்பதே இதன் பொருள்.

முடிந்தால் பரிசு தாருங்கள், குற்றம் குறை ஏதேனும் இருந்தால் அதற்காகக் கழித்துக் கொண்டு பரிசு தாருங்கள். (இந்தக் கழித்தல் வேறு பொருளுடையது.)

அன்புடன்,
டோண்டு ராகவன்

சத்யா Says:
December 4th, 2005 at 5:21 pm e
tharumi,
i used to come here regularly, but unable to reply in all your logs ‘cos of my “inability” to analyse deeply …
avlothaan…otherwise appappo starle oru kutthu kutthittu poiduven

தருமி Says:
December 4th, 2005 at 5:29 pm e
sathya,
i have stopped ‘gazing’ at stars, of late.
anyway, thanks a lot for the patronage.

துளசி கோபால் Says:
December 5th, 2005 at 1:43 am e
தருமி,

நம்ம டோண்டு சொன்னதைப் பார்த்ததும் ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.

‘சிவெட்’ன்னு ஒரு மிருகம் இருக்குல்லே ( புனுகுப் பூனைன்னு நினைக்கிறேன்)
காஃபிப் பழங்களை அதுக்குக் கொடுத்துட்டா, அதோட கழிவுலே அந்தக் காஃபிக் கொட்டைகள்
வெளியே வருமில்லே. அதைக் கழுவி பிறகு வறுத்து காஃபிக்கொட்டையைப் பொடிச்சுப் போடற
காஃபிக்கு பயங்கர விலையாம்.மிகவும் விலை உயர்ந்த காஃபி.( உவ்வே!)

தயவுசெய்து நாமயாரும் தினம் காஃபி குடிக்கறப்போ இதை நினைக்கவேணாம்:-)

சரி இப்பப் பழம் தின்னு கொட்டை…..

‘அறிவு என்ற பழத்தைத் தின்னு அந்தக் கொட்டையை விதைச்சு வருங்கால சந்ததிக்கு
அறிவை வழங்கப்போறவர்’ என்ற அர்த்தம் சரியா வருதா?

பரிசுத் தொகையை நேரில் வந்து பெற்றுக் கொள்கின்றேன். தேங்க்ஸ்.

ஷ்ரேயா Says:
December 5th, 2005 at 11:26 am e


தாணு Says:
December 5th, 2005 at 1:25 pm e
நாம் என்னைக்கு பழம் தின்னு கொட்டையை உருப்படியா ஊணியிருக்கோம்? அதனால அப்பிடி அபூர்வமா செஞ்சவங்களைச் சிறப்பிக்கும் விதமா அந்த வரிகள் வந்திருக்கலாமோ?

டி.பி.ஆர். ஜோசஃப் Says:
December 5th, 2005 at 2:42 pm e
சார் எனக்கு ஒரு பயங்கரமான டவுட்டு,

பொற்காசுல்லாம் தரமுடியுமான்னு தெரியலை. மறுபடியும் Branch Managerஆனா வட்டியில்லா கடனா வேணும்னா தரேன்.

என்னா சந்தேகம்னு கேக்கறீங்களா? பழம் தின்னு கொட்டைப் போட்ட ஆளுங்களோட தலைய பாத்தாலே தெரியும்சார். கொட்டை மாதிரி பளபளப்பா.. பார்த்ததில்லே..

மத்தபடி டோண்டு சார மாதிரி விளக்கமெல்லாம் குடுக்க தெரியலை..

பாருங்களேன் துளசி ஏதோ சொல்ல வந்து நாளைலருந்து காப்பிய கூட நிம்மதியா குடிக்க முடியாது போலருக்கு. இது தேவையாங்க துளசிங்க..

ஜோ Says:
December 5th, 2005 at 4:31 pm e
பெரியவங்கள்லாம் சேர்ந்து சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா!

கோ.இராகவன் Says:
December 5th, 2005 at 5:23 pm e
பழம் தின்னு கொட்டை போடுறது………..இதுக்கென்ன விளக்கம். இந்த வெளக்கத்துக்கே எல்லாரும் தெனறிக்கிட்டு இருக்கும் போது இன்னோன்னு சொல்றேன். தோலிருக்கப் பழந்தின்னி. இந்தத் தோலிருக்கப் பழந்தின்னிதான் பழம் தின்னு கொட்ட போட்டவரொட அண்ணன். யாருக்காவது புரியுதா?

Mohandoss Ilangovan Says:
December 5th, 2005 at 5:46 pm e
I sent one mail to you Dharumi. Please check.

ஷ்ரேயா Says:
December 6th, 2005 at 5:08 am e
//* தருமி இதை என்னவென்று பின்னால் முடிவு செய்வார்.//

“பின்”னால் முடிவு செய்வீங்களா?? புது method ஆ இருக்கே..

ராம்கி Says:
December 6th, 2005 at 6:48 am e
கொட்டை போட்டுப் பழம் தின்னவர் மற்றும் பழம் தின்னு கொட்டை போட்டவர் எல்லாம் தாங்களே.. உங்களுக்கே சந்தேகமா? உங்க ஊர்ல மண்டபத்துல யாராவது வந்து கவிதை எழுதித் தருவாங்களே..

Kumaran Says:
December 7th, 2005 at 9:57 pm e
இதோ வந்துட்டேன் ராம்கி மண்டபத்துல பாட்டெழுதிக் கொடுத்து சந்தேகம் தீர்க்க. பாண்டியனார் சந்தேகம் என்றால் என் தந்தையார் இறையனார் வருவார்; இது பாமரனார் (தருமி ஐயா மன்னிக்கவும், நான் புலவர் தருமியைக் குறிக்கிறேன்) கேட்ட சந்தேகம் தானே - குமரா நீ சென்று வான்னு அனுப்பிச்சிட்டார். பாட்டுக்குப் பொருள் புரியலைன்னா தோலிருக்க சுளைமுழுங்கி நம்ம ராகவன் வந்து விளக்குவார்

மூத்தவரை முழுதும் அறிந்தவரை பக்தியுடன்
கூத்தவனைக் கொண்டாடி ஞானப் பழம் தின்றார்
உருத்திராக்கக் கொட்டை அணிந்தாரைக் கூறுவதே
பழம் தின்று கொட்டை போடுவார்.

தருமி Says:
December 8th, 2005 at 9:06 pm e
பாட்டுக்குப் பொருள் புரியலைன்னா தோலிருக்க சுளைமுழுங்கி நம்ம ராகவன் வந்து விளக்குவார் “// -

ராகவா…வாங்கய்யா..வந்து என்ன ஏதுன்னு சொல்லுங்கய்யா..!

கோ.இராகவன் Says:
December 9th, 2005 at 2:18 pm e
ஆகா! பாட்டைத் தந்த குமரா! ஏட்டை என்னிடம் தள்ளி விட்டாயா! உனது எண்ணமே திருவுளம். அப்படியே செய்திடலாம்.

தருமி, இந்த பாடலுக்கு விளக்கம் எழுதுனா…பெருசா வருது. ஒரு பதிவே போட்டுர்ரேன். சரியா?

குமரன் Says:
December 9th, 2005 at 3:50 pm e
இராகவன்,

தருமி ஐயா கேள்வியைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றிய பாடலை நான் எழுதி இங்க பின்னூட்டத்துல போட்டேன். அதுக்கு கலக்கலா ஒரு விளக்கம் உங்க வலைப்பதிவுல கொடுத்து கலக்கிட்டீங்களே…. நன்றிகள் வாழ்த்துகளுடன்.

நீங்கள் குறிப்பிட்டதைப் போல் இது ‘நான் தேடிப் போட்ட தமிழ்ப்பாடல்’ கிடையாது. ராம்கியின் பின்னோட்டம் பார்த்தவுடன் அப்போது எனக்குத் தோன்றிய விளக்கத்தை பாடலாய் போட்டால் நன்றாய் இருக்கும் என்று தோன்றியதால் நான் எழுதிய பாடல். தளை தட்டியிருக்கும்; அப்படி இருந்தால் என் தலை தட்டுங்கள்.

அது சரி தோளிருக்க சுளைமுழுங்கிக்கு விளக்கம் சொல்லலை?

குமரன்.

J. Rajni Ramki Says:
December 9th, 2005 at 4:03 pm e
//தோளிருக்க சுளைமுழுங்கிக்கு

கோ.இராகவன் Says:
December 9th, 2005 at 5:48 pm e
தேடிய பாடலா இருந்தா என்ன? பேப்பரில் பேனா ஓடிய பாடலா இருந்தா என்ன? எல்லோரும் நாடிய பாடலாக இருந்தால் சரிதானே குமரன்.

தருமி Says:
December 9th, 2005 at 8:38 pm e
தோலிருக்க சுளை முழுங்கி - இதற்குப் பொருள் எல்லோருக்கும் புரியும்தானே; இது ஒன்றும் புரியாத புதிரல்லவே!

குமரன் Says:
December 9th, 2005 at 9:29 pm e
தோலிருக்க சுளைமுழுங்கிக்கு என்ன பொருள்ன்னு சொல்லுங்க தருமி ஐயா.

//தோளிருக்க சுளை…// எழுத்துப் பிழையைத் திருத்தியதற்கு நன்றி. ரஜினி ராம்கிக்கும் நன்றி. முதலில் ரஜினி ராம்கி பின்னூட்டத்தைப் பார்த்த போது எதற்கு அந்த ஸ்மைலி போட்டிருக்கார்னு புரியலை. உங்க பின்னூட்டம் பார்த்தபிறகு தான் நான் செய்த எழுத்துப்பிழை புரிந்தது.

தருமி Says:
December 9th, 2005 at 9:48 pm e
இந்த அர்த்தம் சொல்ற வேலயெல்லாம் தருமிக்குக் கிடையாது. அதெல்லாம் குமரன் & ராகவன் பாத்துக்கணும்; தருமிக்கு கேள்வி கேட்கிறதுதான் பிடிக்கும்னு (& தெரியும்னு! ) தெரியாதா?

Comment
Name

Mail (will not