Thursday, April 13, 2006

152. சோதிடம் - 13…முடிவுரை

Image and video hosting by TinyPic



மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.



இந்த சோதிடப் பதிவுகள் அனுமார் வால் மாதிரி நீண்டு போச்சு. ஆனாலும் ஜாதகம் பற்றிய பதிவுகளுக்கு மட்டுமே சிலரின் மாற்றுக்கருத்து பார்க்க முடிந்தது. வாஸ்து, எண்கணிதம் என்று பலர் முனைப்போடு இருப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் சாதகம் மட்டுமே மக்கள் மனத்தில் ஆழமாய் வேரூன்றி இருக்கிறது என்பதையே இது காண்பிப்பதாக எடுத்துக் கொள்கிறேன்.

ஏற்கெனவே சொன்னது போல வயதானவர்கள் தங்கள் மேல் நம்பிக்கையிழந்து, சுற்றி நிற்கும் பிரச்சனைகளால் மனம் கலங்கி ஏதாவது ஒரு கொழு கொம்பு கிடைக்காதா என்ற சோகச்சூழலில் இந்த “விஞ்ஞானங்களைத்” தேடிச் செல்வதையாவது ‘அய்யோ பாவம்’ என்ற முறையில் விட்டுவிடலாம். வாழ்வின் இளமைக்காலத்தில் ‘ஓடுற பாம்பை மிதிக்கிற வயசில்’ இளைஞர்கள் எவ்வளவு மன உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்கவேண்டும்; அதை விட்டு விட்டு பெயரை மாத்தினால் நல்ல வேலை கிடைக்குமா, மோதிரத்தில் கல்லை மாட்டிக் கொண்டால் எதிர்காலம் வெளிச்சமாகுமா என்று இந்த ‘விஞ்ஞானிகள்’ பின்னால் செல்வது சரியான ஒரு வயித்தெரிச்சல் சமாச்சாரமாக எனக்குத் தோன்றுகிறது. இதைப்பற்றிய பதிவுகளில் நான் சில கேள்விகள் எழுப்பியிருந்தேன் - உண்மையாகவே அவைகளுக்குப் பதில் தெரியாத காரணத்தாலயே அவைகளைக் கேட்டிருந்தேன். யாரும் பதில் சொல்லாததால் இன்னும் என் பழைய நிலையிலேயேதான் இருக்கிறேன்.

இப்பதிவுகளை எழுதக்காரணமே நம் இளைஞர்களில் பலருக்கும் வாஸ்து, எண் கணிதம், பெயர் மாற்றம் போன்ற பலவற்றில் புதிதாக ஏற்பட்டுள்ள ஈர்ப்பே காரணம். கடந்த இருபது ஆண்டுகளில் இந்த விஷயங்கள் மேல் மக்களுக்கு, அதுவும் இளைஞர்களுக்கு, ஏற்பட்டுள்ள தாக்கத்தைப் பார்த்த பிறகே அதைப் பற்றி நினைக்க ஆரம்பித்து, இப்பதிவுகளை எழுதலானேன்.

வழக்கமாகவே சோதிடத்தில் நல்லது ஏதாவது சொன்னால் அதை அப்படியே யாரும் நம்புவதில்லை - people take it with a pinch of salt. ஆனால் அதுவே கெட்டது நடக்கும் என்றால் மனம் பேதலித்து நிற்பது என்பது சாதாரணமாகப் பார்க்கும் ஒரு விஷயம்தான். கொஞ்ச நஞ்சம் இருக்கும் நம் தன்னம்பிக்கையை பாழடிக்கும் என்று தெரிந்தும் அதில் வீழ்வது புத்திசாலித்தனமாகாது.

அடுத்து கடைசியாக சாதகத்திற்கு வருவோம். இதைப்பற்றிய பதிவுகளுக்குத்தான் நம்பிக்கையாளர்கள் சிலர் பதிலளிக்க வந்தனர். நன்றி அவர்களுக்கு. நம்பிக்கையாளர்கள் வழக்கமாகச் சொல்லும் ஒரு விஷயம்: சாதகம் ஒரு கணக்கு; ஆனால் சிலரே அதை மிகச்சரியாக கணிக்கத் தெரிந்தவர்கள். அந்தக் கணக்கு தெரியாதவர்கள் கணிக்கும்போது ஏற்படும் தவறுகளை வைத்து சாதகமே தவறு என்று சொல்வது தவறு என்பது அவர்களின் ஒரு விவாதம். இவ்விவாதத்திற்கு தொப்புளான் சொன்னதை இங்கு மீண்டும் சுட்டிக்காட்டி அதற்குரிய பதிலாகத் தருகிறேன்: கணக்கு சரிதான். கணிக்கிறவர்தான் தப்புன்னா இத்தனை வருசத்தில ஒரு அமைப்பு ஏற்படுத்தி தரப்படுத்தி டாக்டருங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிறமாதிரி தரவேண்டியதுதான.அது ஆதரவாளர்களுக்கும் நல்லதுதான.திரும்பத் திரும்ப சண்டை போட வேண்டாம்ல.இந்த மாதிரி விஷயத்தில எல்லாம் நிரூபிக்க முடியாதுங்கறது (non falsifiable)வசதியாப் போச்சு.

அடுத்து, இந்த சாதக அமைப்புகள் நம் “தலைவிதி” என்றே கொள்வோம். அப்படியாயின் அது கடவுள் கொடுத்த ஒன்றாயின் பின் எதற்கு அந்த அமைப்புகளில் காணும் ‘தோஷங்களுக்கு’ப் பரிகாரங்கள்? கடவுளுக்குக் கையூட்டு கொடுத்து, கிரஹங்களின் ‘தாக்கத்தை’ மாற்றுவதா இது? இந்தப் பரிகாரங்களைப் பற்றிச் சொல்லும்போது, சென்ற பதிவின் பின்னூட்டத்தில் சம்மட்டி சொன்னதை மீண்டும் நினைவு கூர்வது நன்றாயிருக்கும்:

“தோசம் கழிக்க மறுபடியும் சாமிக்கிட்ட தான போகனும் !. ஜோதிடத்தை 100% நம்புவர்கள் கூட அவைகளை மாற்றிவிட முடியும் என்று கருதுகிறார்கள், ஆஞ்சினேயருக்கு வட மாலை, சனீஸ்வரனுக்கு எள்ளுசாதம், துர்க்கைக்கு குங்கும பூஜை இப்படி என்னென்னுமோ தகிடுதத்தமெல்லாம் பண்ணிதாங்களே நம்புகிற ஜாதகத்தை பொய்யாக்கிறவர்கள் ஜோசிய நம்பிக்கையாளர்கள் தாம்.”

இன்னொரு காரியம்: சாதகம் கணிக்க குழந்தை ‘ஜனித்த’ சரியான நேரம் தெரியவேண்டும் என்பதில் ‘சரியான நேரம் எதுவென்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகளையும் முன் பதிவில் பார்க்கலாம். கருச்சிதைவுக்கு எதிராகக் கருத்து சொல்லும் கிறித்துவ, இஸ்லாம் (மற்ற மதக்கோட்பாடுகள் பற்றி தெரியவில்லை) மதங்களிலும் தாயின் கரு சூல் (fertilization) ஆன உடனேயே அங்கே ஓர் உயிர் தோன்றி விட்டதாகவே கருதுகின்றன. அப்படியாயின் நான் ஞானவெட்டியானிடம் கேட்ட கேள்வி:
-சரியான நேரத்தை எடுத்துக்கொண்டு கணித்தால் ஜாதகம் மிகச்சரியாக இருக்கும் - ஒரு சாராரின் வாதம்.

-சரியான பிறந்த நேரம் தாயின் கருமுட்டை சினையுறுவது; ஆனால் அது யாராலும் கண்டுபிடிக்க முடியாத விஷயம்.

- அப்படியாயின் மற்றபடி பிறந்த நேரம் வைத்துக் கணக்கிடும் - திருக்கணிதத்தையும் சேர்த்தே - எல்லா ஜாதகக் கணிப்புகளுமே தவறாகத்தான் இருக்க வேண்டும்.

- எல்லா கணிப்புகளுமே தவறாக இருப்பின். அதனால் யாருக்கு என்ன பயன்? எல்லாமே தேவையற்றதுதானா?

- எல்லாமே தேவையற்றதாயின் பின் அது ஏன் காலங்காலமாய் மக்களால் பின்பற்றப் படுகிறது?

நறுக்கென்று ஞானவெட்டியான் இதற்குத் தந்த பதில்:

அறியாமையைத் தவிற வேறொன்றுமில்லை.

ஞானவெட்டியான் மேலும் சொன்னது:

எல்லாவற்றிற்கும் மேலாக “எது வரினும் வரட்டும்; எதிர்கொள்வோம். தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்” என முடிவெடுத்தால் சோதிடர் பக்கமே செல்லவேண்டாம்.”

தருமியின் கடைசிக் கேள்வி: மதங்களையும், கடவுளையும் நம்புகிறவர்களே இந்த வகையான விஷயங்களில் ஈடுபாடு காண்பிப்பது எனக்கு கொஞ்சம் அதிசயமாகவே படுகிறது. உங்களுக்கு உண்மையிலேயே நீங்கள் கும்பிடும் தெய்வத்திடம் நம்பிக்கை இருந்தால் இந்த துணை நம்பிக்கைகள் எதற்கு? இதனால் உங்கள் கடவுள் நம்பிக்கையையும், உங்கள் கடவுள்களையும் - அதனால் உங்களையுமே - நீங்கள் கேவலப்படுத்திக் கொள்ளவில்லையா?

பின்குறிப்பு:

ஜாதக நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் - இதற்கு முந்திய பதிவின் கடைசியிலிருந்து இரண்டாவது பத்தி - last but one para - வுக்கும் கொஞ்சம் பதில் சொன்னால் நன்றாக இருக்குமே…



இதைப் பற்றி இங்கேயும்…

Š







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 13 2006 04:00 pm | சமூகம் |
45 Responses
muthu(tamizhini) Says:
April 13th, 2006 at 4:20 pm


//இத்தனை வருசத்தில ஒரு அமைப்பு ஏற்படுத்தி தரப்படுத்தி டாக்டருங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிறமாதிரி தரவேண்டியதுதான//

இதுக்குத்தான் அண்ணன் ஜோஷி முயன்றார்.நீங்க விட்டீங்களா? கேள்வி கேக்கறீங்க பெரிய கேள்வி…
உடம்பு சரியில்லைன்னா டாக்டர் கிட்ட போறீங்க..அப்புறம் சோதிடம்னா இளக்காரமா? என்னய்யா நியாயம் இது?

Geetha Sambasivam Says:
April 13th, 2006 at 6:03 pm
ஜாதகம் கணிக்க சரியான பிறந்த நேரம் தான் எடுத்துக் கொள்ளப் பட வேண்டுமே அன்றிக் கருவுற்ற நேரம் அல்ல. பரிகாரம், பூஜை என்று செய்வது நம் மனச்சாந்திக்காகவும், கெட்டது நடந்தால் ஏற்கும் மனப்பக்குவம் பெறவும்தான்.கிறித்துவத்தில் கூட மெழுகுவர்த்தி ஏற்று வழிபாடு செய்வதும், முஸ்லீம்கள் Chaddar போடுவதும் உண்டு. நாங்கள் பிரார்த்தனைக்கு வேளாங்கண்ணியிலும் செய்தது உண்டு. தர்காவிலும் Chaddar போட்டிருக்கிறோம்.பிரார்த்தனை மூலம் நடக்க முடியாத விஷயங்கள் நடக்க முடியும் என்று நம்புகிறோம்.இல்லாவிட்டாலும் அதை ஏற்க வேண்டிய சக்தியை அந்த ஆண்டவன் கொடுக்கவேண்டும் என்று தான் ப்ரார்த்திப்போம்.

தருமி Says:
April 13th, 2006 at 8:44 pm
hi muthu(thamizini),
the problem with Joshi was he was putting the cart before the horse!

தருமி Says:
April 13th, 2006 at 8:45 pm
Geetha Sambasivam

“ஜாதகம் கணிக்க சரியான ….என்று தான் ப்ரார்த்திப்போம். “//

- Amen!

தருமி Says:
April 13th, 2006 at 8:46 pm
geetha s.,
i have added a post-script in this post. pl. note that too.

ஞானவெட்டியான் Says:
April 13th, 2006 at 9:05 pm
//மதங்களையும், கடவுளையும் நம்புகிறவர்களே இந்த வகையான விஷயங்களில் ஈடுபாடு காண்பிப்பது எனக்கு கொஞ்சம் அதிசயமாகவே படுகிறது. உங்களுக்கு உண்மையிலேயே நீங்கள் கும்பிடும் தெய்வத்திடம் நம்பிக்கை இருந்தால் இந்த துணை நம்பிக்கைகள் எதற்கு?//

நோய் வந்துவிடுகிறது. ஒரு மருத்துவரிடம் போகிறோம். உடனே, பக்கத்து வீட்டுக்காரர், “அட, போய்யா! நம்ம மருத்துவர்கிட்ட பாக்கலாம்; வா” என்கிறார். சரி; ஒரு SECOND OPINION வங்கிக் கொள்வோமே என அந்த மருத்துவரிடம் போகிறோம். அது போலத்தான். இந்தக் கடவுள்கிட்ட போயாச்சு; அந்தக் கடவுள்கிட்டயும் போவோமே ன்னுதான். அதுக்காக முதல் மருத்துவரிடம் இருந்த நம்பிக்கை போய்விட்டது என அருத்தமா?
கடவுள் வந்து எங்காவது நேரில் பேசியிருக்கிறதா? அதுதான் சோதிடர்களை நியமித்துள்ளது. அங்கு போனால், “இந்த சாமிக்கு இப்படிப் பரிகாரம் செய்” அப்பிடிம்பார். உடனே செய்வீர்கள். “ஆவி உனக்கு; அமுது எனக்கு” ன்னு பரிகாரம் செய்பவர் சுளையாய் கொண்டுபோய் விடுவார். அதுக்காகக் கடவுள் நம்பிக்கை இருப்பவன் சோதிடரிடம் ஏன ்போகிறாய்? ன்னு கேட்டா நியாயமா?

// இதனால் உங்கள் கடவுள் நம்பிக்கையையும், உங்கள் கடவுள்களையும் - அதனால் உங்களையுமே - நீங்கள் கேவலப்படுத்திக் கொள்ளவில்லையா?//

நாங்கள் கேவலமென நினைக்கவில்லை; நீங்கள் நினைத்தால் அதுக்கு யார் பொறுப்பு.

அந்தக் காலத்துல சிவனுக்கும் நக்கீரனுக்கும் கேள்வி கேட்டே கலகமூட்டினீர்கள். இப்பொழுது யார் யாரெல்லாம் என்னோடு சண்டைக்கு வரப்போகிறார்களோ?

தருமி Says:
April 13th, 2006 at 10:28 pm
“அந்தக் காலத்துல சிவனுக்கும் நக்கீரனுக்கும் கேள்வி கேட்டே கலகமூட்டினீர்கள்.”//
- இதென்ன புதுக்கதை…நான் (திருவிளையாடல்)பார்த்த வரைக்கும், ‘நான்’ அறியாப்ப் பிள்ளையா வந்து, வாங்கிக் கட்டிட்டு போன பாவப்பட்ட ஜென்மம் தானேங்க!

ஆனாலும் ரொம்பவே நீங்க ‘அவங்களை’ லந்து பண்ணியிருக்கீங்க…

குறும்பன் Says:
April 14th, 2006 at 1:24 am
” எத தின்னா பித்தம் தெளியும்ன்னு அலையற” ஆளு எதை வேணும்னாலும் தின்பான், பித்தம் போகனும் அதுதான் அவனுக்கு தேவை.
சோசியம், எண்கணிதம், வாஸ்து, …. எல்லாம் இப்படிதான் வாழுது. சோசியத்தோட இரகசியம் என்னன்னா கேக்கறவங்க நம்பற மாதிரி சோசியம் சொல்லனும் இல்லைன்னா ….அடுத்த ஆளு, நம்ம ஊர்ல சோசியக்காரங்களுக்கா பஞ்சம்.

ஞானவெட்டியான் Says:
April 14th, 2006 at 7:54 am
அய்யா, தருமி,

வேண்டாமையா! வேண்டாம்!!
என்னை உட்டுறுங்க. நான் ஓடிப் போயிடரேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

தருமி Says:
April 14th, 2006 at 1:16 pm
குறும்பன்,
எதையும் திங்காம ரெண்டு நாள் பட்டினி கிடந்தாதான் பித்தம் தீரும்னு சொல்லணும் அவங்கிட்ட…

தருமி Says:
April 14th, 2006 at 1:18 pm
ஞானவெட்டியான்,
“என்னை உட்டுறுங்க. நான் ஓடிப் போயிடரேன்.”// - எங்க விடறது; அதான் உங்கள இங்கன இழுத்து விட்டாச்சே !!

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

சம்மட்டி Says:
April 15th, 2006 at 10:11 am
//இதனால் உங்கள் கடவுள் நம்பிக்கையையும், உங்கள் கடவுள்களையும் - அதனால் உங்களையுமே - நீங்கள் கேவலப்படுத்திக் கொள்ளவில்லையா?//
தருமி அவர்களே, எனது எண்ணங்களை முடிவுரையில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் சோதிட பதிவு நிறைவுற்றாலும், இன்னும் சில் விசயங்கள் பேசப்படவில்லை என்று கருதுகிறேன். உதாரணமாக சனி பிடிப்பது. சிவ பெருமானுக்கே சனி பிடிக்க சென்றதாகவும், அதனால் அவர் ஓடி ஒளிந்ததாகவும், பித்தனாக மாறியதாகவும் கதைகள் இருக்கின்றன, சனி சிவனைப் பார்த்து கெ. கெ எனச் சிரித்தாதகவும் , அதாவது நான் பிடிக்க வந்ததற்கே, நீ பல்வேறு அவதிகளையும் அடைந்தாய் ஒரு வேளை பிடித்திருந்தால் உன் கதி என்ன என்று சொன்னதாகவுன் புராணபடங்களிலும், சமீபத்திய விக்ரமாத்திதன் சீரியலிலும் காட்டப்பட்டது ( இதல்லாமா பார்கிறீர்கள் ? என்ற கின்டலை நானும் ரசிக்கிறேன்).

இதிலிருந்து நான் சொல்ல வருவது என்ன வென்றால், சோதிடத்தை நம்பி, சோதிட பரிகாரம் செய்பவர்கள் எண்ணிப் பார்பார்களா, தாங்கள் நம்பும் கடவுள்களே, சோதிட பலன்களிலிருந்து தப்பியவர்கள் இல்லை என்று !

எரிகிற கொல்லியில் எந்த கொல்லி நல்ல கொள்ளி ?

இது ஒரு வழக்கு சொல்லோ அல்லது பழமொழியோ, எதுவாகவும் இருந்து விட்டு போகட்டம், கருத்து இது தான், இந்து தெய்வத்தில் எந்த தெய்வம் சக்தி வாய்ந்தது,

சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஐயப்பனா ?
சென்ற நூற்றாண்டில் காளியாக இருந்து வெங்கடேசனாக மாறிய திருப்பதி வெங்கடாஜலபதியா ?
( ஆதாரம் , இந்து மதம் எங்கே போகிறது , நக்கீரன் - தாத்தாச்சாரியார் )
கோபத்தையும் ஆசையும் தனித்துக் கொள்ளத் தெரியாமல் கோவித்துக் கொண்டு ஆண்டியான பழனி ஆண்டவரா ?

அல்லது திடீர் புகழ் மேல்மருவத்தூர் இன்ன பிற,

பல்வேறு கடவுள்கள் எதற்கு, ஒன்றை காட்டிலும் ஒன்று சக்தி வாய்ந்ததா ? அப்படி என்றால் சக்தியற்ற ஒன்றை கட்டிக்கிட்டு அழுவானேன் ? எண்ணிப்பார்பார்களா ?

தருமி அவர்களே, நீங்கள் பில்லி சூனியத்தைப் பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று வேண்டு கோள்வைக்கிறேன்.

இந்த பில்லி சூனியம் - சோதிடம், கடவுள் சக்தி எல்லவற்றையும் தூக்கி சாப்பிடுவதாக நம்பிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.

சம்மட்டி

சம்மட்டி Says:
April 15th, 2006 at 10:15 am
//இதனால் உங்கள் கடவுள் நம்பிக்கையையும், உங்கள் கடவுள்களையும் - அதனால் உங்களையுமே - நீங்கள் கேவலப்படுத்திக் கொள்ளவில்லையா?//
தருமி அவர்களே, எனது எண்ணங்களை முடிவுரையில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் சோதிட பதிவு நிறைவுற்றாலும், இன்னும் சில் விசயங்கள் பேசப்படவில்லை என்று கருதுகிறேன். உதாரணமாக சனி பிடிப்பது. சிவ பெருமானுக்கே சனி பிடிக்க சென்றதாகவும், அதனால் அவர் ஓடி ஒளிந்ததாகவும், பித்தனாக மாறியதாகவும் கதைகள் இருக்கின்றன, சனி சிவனைப் பார்த்து கெ. கெ எனச் சிரித்தாதகவும் , அதாவது நான் பிடிக்க வந்ததற்கே, நீ பல்வேறு அவதிகளையும் அடைந்தாய் ஒரு வேளை பிடித்திருந்தால் உன் கதி என்ன என்று சொன்னதாகவுன் புராணபடங்களிலும், சமீபத்திய விக்ரமாத்திதன் சீரியலிலும் காட்டப்பட்டது ( இதல்லாமா பார்கிறீர்கள் ? என்ற கின்டலை நானும் ரசிக்கிறேன்).

இதிலிருந்து நான் சொல்ல வருவது என்ன வென்றால், சோதிடத்தை நம்பி, சோதிட பரிகாரம் செய்பவர்கள் எண்ணிப் பார்பார்களா, தாங்கள் நம்பும் கடவுள்களே, சோதிட பலன்களிலிருந்து தப்பியவர்கள் இல்லை என்று !

எரிகிற கொல்லியில் எந்த கொல்லி நல்ல கொள்ளி ?

இது ஒரு வழக்கு சொல்லோ அல்லது பழமொழியோ, எதுவாகவும் இருந்து விட்டு போகட்டம், கருத்து இது தான், இந்து தெய்வத்தில் எந்த தெய்வம் சக்தி வாய்ந்தது,

சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஐயப்பனா ?
சென்ற நூற்றாண்டில் காளியாக இருந்து வெங்கடேசனாக மாறிய திருப்பதி வெங்கடாஜலபதியா ?
( ஆதாரம் , இந்து மதம் எங்கே போகிறது , நக்கீரன் - தாத்தாச்சாரியார் )
கோபத்தையும் ஆசையும் தனித்துக் கொள்ளத் தெரியாமல் கோவித்துக் கொண்டு ஆண்டியான பழனி ஆண்டவரா ?

அல்லது திடீர் புகழ் மேல்மருவத்தூர் இன்ன பிற,

பல் வேறு கடவுள்கள் எதற்கு, ஒன்றை காட்டிலும் ஒன்று சக்தி வாய்ந்ததா ? அப்படி என்றால் சக்தியற்ற ஒன்றை கட்டிக்கிட்டு அழுவானேன் ? எண்ணிப்பார்பார்களா ?

தருமி அவர்களே, நீங்கள் பில்லி சூனியத்தைப் பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று வேண்டு கோள்வைக்கிறேன்.

இந்த பில்லி சூனியம் - சோதிடம், கடவுள் சக்தி எல்லவற்றையும் தூக்கி சாப்பிடுவதாக நம்பிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.

சம்மட்டி

Geetha Sambasivam Says:
April 15th, 2006 at 3:48 pm
ஜோதிடம் என்பது ஒரு முழுமையான சாஸ்திரம். தன் தேவைக்காக மற்ற இடத்திலிருந்து அது எதையும் எதிபார்க்கவில்லை. அப்படி அதை நம் முன்னோர்களும் மகான்களும் உருவாக்கவில்லை.ஒருத்தருக்கு ஊரும் பேரும் தெரிந்தாலே போதும். ஜாதகம் கணிக்கலாம். அதற்கு” நஷ்ட ஜாதக கணிதம் “என்று பெயர் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.பகுத்தறிவு உள்ள மனிதனுக்குத்தான் ஜாதகம் ஜோசியம் எல்லாம் தேவை. ஏனென்றால் மனிதன் தான் தப்புப் பண்ணுவான், பண்ணுகிறான்.இதை விஞ்ஞானமாகப் பார்த்தால் கூடக் கடைசியில் ஆன்மீகத்தில் தான் போய் முடியும்.விஞ் ஞானம் வளர வளர மெய்ஞ்ஞானம் வளரும். உதாரணம்; எல்லா விஞ்ஞானிகளுமே ஆன்மீகவாதிகளாக இருப்பதுதான்.மற்றபடி உங்கள் பதிவுகளால் என் அறிவு வளருகிறது. நன்றி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam Says:
April 15th, 2006 at 4:22 pm
வானில் ஏற்படும் அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில் கடல் அலைகளில் ஏற்படும் மாற்றங்களைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். மேலும் மனநிலை சரியில்லாதவர் கூட அமாவாசை, பெளர்ணமி நாட்களில் வித்தியாசமாக நடந்து கொள்வது யாராலும் மறுக்க முடியாது.அப்படி இருக்கும்போது விண்ணில் சுற்றும் கோள்கள் மனிதனின் நடத்தைக்கும் அவன் வாழ்க்கைக்கும் காரணமாக ஏன் அமைய முடியாது?

தருமி Says:
April 15th, 2006 at 8:37 pm
சம்மட்டி,
நன்றிக்கு நன்றி.
இந்த பில்லி சூன்ய விவகாரமெல்லாம் பற்றி அதிகமாகத் தெரியாதே. அதில நம்ம knowldege எல்லாம் நம்ம தமிழ் சினிமாக்களிலும், மெகா சீரியல்களில் இருந்து தெரிந்து கொண்டவைகள்தான்! தெரிந்தவர்கள் (உங்களுக்கு..?)எழுதினால் தெரிந்து கொள்ளலாம்.

தருமி Says:
April 15th, 2006 at 8:44 pm
Geetha Sambasivam,
வானில் ஏற்படும் அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில்…”// G force of moon அப்டின்னெல்லாம் என்னவோ சொல்லுவாங்களாமே…அது மாதிரி விளக்கங்கள் எல்லாத்தையும்தான் எங்கள மாதிரி ஆளுங்க விஞ்ஞானம் அப்படி என்கிறோம்.

“விண்ணில் சுற்றும் கோள்கள் மனிதனின் நடத்தைக்கும் அவன் வாழ்க்கைக்கும் காரணமாக ஏன் அமைய முடியாது? இதற்கு என் விளக்கம் என் பதிவுகளில் இருக்கிறதே. நீங்கள்தான் இப்போ பதில் சொல்லணும்.

தருமி Says:
April 15th, 2006 at 8:56 pm
Geetha Sambasivam,

விஞ் ஞானம் வளர வளர மெய்ஞ்ஞானம் வளரும். // - அப்டியா? (பிதாமகன் சூர்யா மாதிரி சொல்லிக்கோங்க!)

உதாரணம்; எல்லா விஞ்ஞானிகளுமே ஆன்மீகவாதிகளாக இருப்பதுதான்.// - மறுபடியும் ஒரு “அப்டியா?”

மற்றபடி உங்கள் பதிவுகளால் என் அறிவு வளருகிறது.//-கேக்கவே எவ்வளவு சந்தோஷமாயிருக்கு !

நன்றி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். // - தாமதமானாலும், எனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.

தருமி Says:
April 15th, 2006 at 9:00 pm
ஞானவெட்டியான்,
நீங்கள் அனுப்பிய பின்னூட்டத்தை மட்டுறுத்தாது பதிவுக்கு அனுப்பிய பிறகும் இங்கு வரவில்லை; ஏனென்று தெரியவில்லை. வழியில் எங்கேயோ “காக்கா தூக்கிப் போச்சு”

ஞானவெட்டியான் Says:
April 15th, 2006 at 9:31 pm
அன்பு அம்மையீர், கீதா சாம்பசிவம்,

//ஜோதிடம் என்பது ஒரு முழுமையான சாஸ்திரம்.//

இரண்டாம் கருத்து இல்லை.

//தன் தேவைக்காக மற்ற இடத்திலிருந்து அது எதையும் எதிபார்க்கவில்லை. அப்படி அதை நம் முன்னோர்களும் மகான்களும் உருவாக்கவில்லை.ஒருத்தருக்கு ஊரும் பேரும் தெரிந்தாலே போதும். ஜாதகம் கணிக்கலாம். அதற்கு” நஷ்ட ஜாதக கணிதம் “என்று பெயர் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.//

நட்ட சாதகம் என்பது வேறு. ஒருவன் சோதிடனிடம் வருகிறான். வந்து அந்த அறையில் எந்த இடத்தில் அமர்கிறான் எனப் பார்க்கவேண்டும். அந்த அறையைப் 12 கட்டமாக்கி, அதில் சோதிடன் அமர்ந்த இடத்தை இலக்கினமாக்கி, கோட்சாரப் பலனைக்கொண்டு அவன் எதற்க்காக வந்துள்ளான் எனக் கணித்துச் சொல்வதே “நட்ட சாதகம்”. எடுத்துக்காட்டாக, 5ம் இடத்தில் அமர்ந்தால் அவன் குழந்தைப் பேறு பற்றி வினவ வந்துள்ளான் எனவும், 6ம் இடத்தில் அமர அவன் நோய் நொடிகளையும், எதிரிகளால் தொல்லை பற்றியும் சாதகம் பார்க்க வந்துள்ளான் எனவும் கொள்வர்.

இது எவ்வளவு உண்மை என வினவ, “எனக்குத்தெரியாது” என்பதே விடை.

swamy red bull Says:
April 15th, 2006 at 10:19 pm
Arrumaiyana paathevu anbaree

ungaludaya inthaa ulaipaal konjamavadu thirunthi irrupargal endru nambuhiren

தருமி Says:
April 15th, 2006 at 11:08 pm
ஞானவெட்டியான்,
நன்றி.
ஆமா, என்ன மாதிரி ஆளு, உங்கள மாதிரி ஆளுட்ட ஐடியா கேட்டுட்டு அந்த ஜோசியரிட்ட போய் குண்டக்க மண்டக்கன்னு உக்காந்து…கன்னா பின்னான்னு கேட்டா… ரொம்ப “நட்ட” ஜோதிடமா ஆயிடாது..?

தருமி Says:
April 15th, 2006 at 11:12 pm
swamy red bull,
konjamavadu thirunthi irrupargal …”// என்னங்க நீங்க…உங்க ஜாதக அமைப்பைப் பார்த்தா, நீங்க ரொம்ப optimisticஆன ஆளுமாதிரி தெரியுதே ரொம்ப தப்பு தப்பா நம்புவீங்கன்னும் தெரியுது..

இந்த உங்க ‘செங்காளை’ பெயருக்கு ஒரு விளக்கம் கொடுக்கலாமா..?

ஞானவெட்டியான் Says:
April 16th, 2006 at 6:57 am
அன்பு தருமி,
//ஆமா, என்ன மாதிரி ஆளு, உங்கள மாதிரி ஆளுட்ட ஐடியா கேட்டுட்டு அந்த ஜோசியரிட்ட போய் குண்டக்க மண்டக்கன்னு உக்காந்து…கன்னா பின்னான்னு கேட்டா… ரொம்ப “நட்ட” ஜோதிடமா ஆயிடாது..? //

கை காட்டுற வேலைக்கெல்லாம் போறதில்லீங்க. வம்பு வேண்டாம்.

தருமி Says:
April 16th, 2006 at 6:02 pm
ஞானவெட்டியான்,
நீங்க போக வேண்டாம்; நாங்களே உள்ள இழுத்திட மாட்டோமா..?

swamy red bull Says:
April 16th, 2006 at 7:35 pm
//இந்த உங்க ‘செங்காளை’ பெயருக்கு ஒரு விளக்கம் கொடுக்கலாமா..?//

swamy sankara…(or) premaa..(or)sachi…(or)sandra… ippadi peyar vaithukondal eppadiyum erandu varudathil paalana party endru ullathuki poturanga

so ivangakita escapeahurathuku ippadi oru getup….

how is it ???

தருமி Says:
April 16th, 2006 at 9:51 pm
எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க
பேசாம செங்காளைன்னு மட்டும் பேரை வச்சுக்கிட்டு, ‘ஸ்வாமி’யை ட்ராப் பண்ணிர்ரது நல்லதுன்னு தோணுது. எப்போ யார் எதுக்கு உள்ளே போறதுன்னு யாருக்குத் தெரியும்..சொல்லுங்க

Geetha Sambasivam Says:
April 16th, 2006 at 9:54 pm
I have to confirm about the” Nashta Jathaka Ganitham” and try to give the right answer to Mr. Gnanavettiyan. Without confirming it will not look good. Anyway I thank him for the new approach in the “Nashta Jathaka Ganitham”.Till today I did not hear about this method.

தருமி Says:
April 17th, 2006 at 8:41 am
Geetha Sambasivam,& கோபி,
உங்கள் இருவருக்குமே ஒரு கேள்வி; ஏற்கெனவே கேட்டதுதான். திரும்பவும் கேட்கிறேன்: ஜாதக நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் - இதற்கு முந்திய பதிவின் கடைசியிலிருந்து இரண்டாவது பத்தி - last but one para - வுக்கும் கொஞ்சம் பதில் சொன்னால் நன்றாக இருக்குமே…

Sam Says:
April 17th, 2006 at 5:38 pm
தருமி சார்,

உங்கள் கேள்விக்கு விரிவான பதில் நாளை அனுப்புகிறேன். நீங்கள் கேட்ட ஒவ்வொரு
கேள்விக்கும் விரிவான பதில் அளிக்க வேண்டும் என்பதால் மலைத்துப் போய் பேசாமல் இருந்து
விட்டேன். கடைசி கேள்விக்கு மட்டும் நாளை பதில் அனுப்புகிறேன்.

அன்புடன்
சாம்

தருமி Says:
April 17th, 2006 at 10:23 pm
sam,
பயத்தோடு’ எதிர்பார்க்கிறேன் — விரிவான பதில் என்று சொன்னதால் வந்த பயம்

துளசி கோபால் Says:
April 18th, 2006 at 2:29 am
தருமி,

சோதிடம் சரியா, இல்லே பித்தலாட்டமான்னு இன்னும் புரியலைங்களா? 13 பதிவுகள். நல்லாதான் இருந்துச்சு.

நானும் ஒரு சமயம், மகளுடைய ஜாதகத்தைப் பார்க்கணுமுன்னு ஒரு ‘நல்ல, நம்பகமான’ ஜோசியரைப் பார்க்க
நண்பர்மூலம் ஏற்பாடு செஞ்சு நேரம் வாங்கி வச்சிருந்தேன். மொதநாள் முழுவதும் மன உளைச்சல். போறதா வேணாமான்னு.
அப்ப நெருங்கிய தோழி சொன்னாங்க, வேணாம்னு. ஏன்னு யோசனைச் செஞ்சுக்கிட்டே அதை பத்தி விவாதிச்சோம்.

நல்லதா சொல்லிட்டாருன்னா மனசுக்குச் சந்தோஷமா இருக்கும். ஒருவேளை எல்லாம் நெகட்டிவ் பாய்ண்ட்ஸ்னு
இருந்தா, அதை நினைச்சுக்கிட்டே இன்னும் மனசு கஷ்டம் ஆயிருமுல்லே?

நம்மளை இந்த பூமிக்குக் கொண்டுவந்த கடவுள் நம்மைக் காப்பாத்தட்டும். இதைவிட அவருக்கு வேற என்ன வேலை?னு
முடிவுசெஞ்சுக்கிட்டு அந்தஜோசியர் அப்பாயிண்ட்மெண்டைக் கேன்சல் செஞ்சுட்டேன்.

ஆனா ஒண்ணுங்க, கைரேகை சாஸ்த்திரம் இருக்கு பாருங்க. அதை நம்பலாம். நம்ம வாழ்க்கை நிகழ்ச்சியே இருக்கு.
நேரம் கிடைக்கறப்ப ஒரு பதிவாப் போடலாமுன்னு இருக்கேன்.

தருமி Says:
April 18th, 2006 at 8:51 am
எல்லாம் நல்லா சொல்லிட்டு கடைசியில ஒரு விஷயத்தில இப்படி சொல்லீட்டீங்களே
ஏன் அது மட்டும் exempted
தொண்ணூறுகளில் கட்டாயம் வெளிநாடு போகப் போகிறேன் என்ற ஒரு நிலையில், தவறிப்போனது. அப்போது என் ரேகை பார்த்து, ஒரு X - mark இருந்தாதான் போக முடியும்; அது உனக்கு இல்லை; அவ்வளவுதான் அப்டின்னாங்க. (நீ மட்டும் ஏன் கைரேகை பார்த்தாய் என்று கேட்பீர்களே; நானாகப் போகவில்லை. அதோடு அப்போவெல்லாம் இவ்வளவு தீர்க்கமான கருத்துக்கள் கிடையாது.) அப்படி சொன்னது பொய்த்துப் போனதே இது எப்டி இருக்கு…

Sam Says:
April 18th, 2006 at 9:00 am
• மேற்கூறிய கேள்விகள் இந்த ஜாதகமெல்லாம் கணிதம், விஞ்ஞானம் என்று கூறுவதற்கு எதிர்க் கேள்விகளாகக் கேட்கப்பட்டவைகள். அவைகளை கூட விட்டு விடுவோம். நடப்புக்கு வருவோம். ஜாதகப் பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்கள், மற்ற சுப காரியங்களையும் எடுத்துக் கொள்வோம். அவைகளின்றி நடக்கும் அதே போன்ற திருமணங்கள், நல்ல காரியங்களையும் பார்ப்போம். என்ன வித்தியாசம் என்று நம்புவர்கள்தான் கூற வேண்டும். ஏதாவது வித்தியாசம் இருக்கிறது என்று (மனசாட்சிக்கு விரோதமில்லாமல்/ நெஞ்சில் கைவைத்து…!!!) கூறத்தான் முடியுமா? விஞ்ஞான முறைப்படி பெரிய, ஒழுங்கான, முறையான statistics கூட வேண்டாம். நம்மைச் சுற்றியுள்ள நடப்புகளை வைத்தே பார்ப்போமே. என் பார்வையில் எல்லாம் ஒரே மாதிரிதான்…நல்லதும் நடக்கிறது; அல்லதும் நடக்கிறது. தனிமனித குண நலன்கள்தான் முக்கியமாய் இருக்கிறதேயொழிய எங்கேயோ உள்ள நட்சத்திரங்களும், கிரஹங்களும் உங்களையோ என்னையோ ‘கண்டுக்கிறதே இல்லை’! அது பாட்டுக்கு அது வேலைய பாத்துக்கிட்டு போகின்றன. நீங்களும் அவைகளை விட்டுவிடுங்களேன் பாவம்!!

தருமி சார்,

பெத்தவங்க எல்லாருமே தன் பிள்ளைங்க நல்லா இருக்கணும்ன்னு தான் நினைக்கிறாங்க.நம்ம ஊர்ல இன்னும் அப்பா அம்மா பார்த்தவங்கள கல்யாணம் பண்ணிக்கிறவங்க நிறையப் பேர் இருக்காங்க. காதல் கல்யாணம் பண்ணிக்கிறவங்களயோ ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சு
கல்யாணம் பண்ணிக்கிறவங்கள பத்தி நான் பேச வரல. மாப்பிள்ளை பெண் பார்க்கும் போது இரண்டு பேருக்கும் பொருத்தம் இருக்கான்னு, எதிர்காலம் எப்படி இருக்கும்ன்னு தெரிங்சுக்கத்தான் சோதிடம். எந்த சாதகத்த எடுத்துப் பார்த்தாலும் ஏழாம் இடம் வாழ்க்கைத் துணையைப் பத்திச் சொல்லும். பன்னிரண்டாம் இடமும் ஆறாம் இடம் இன்னும் சில விவரங்கள் சொல்லும். செவ்வாய்தோஷம்ன்னு இன்னொன்னு சொல்வாங்க. சோதிட விதிகளின் படி இது நிறையப் பேர் சாதகத்தில இருக்கும். இத சரிப்படுத்த இன்னொரு செவ்வாய் தோஷம் உள்ள சாதகரை திருமணம் செய்யச்
சொல்றாங்க. இது மட்டுமில்ல, நட்சத்திரப் பொருத்தம், அந்தப் பொருத்தம் இந்தப் பொருத்தம்ன்னு நிறைய பார்ப்பாங்க.

சில பேருக்கு உள்ளுணர்வு சாதகமெல்லாம் பார்க்க வேண்டாம் தேவையிலைன்னு சொல்லும். அவங்க அவங்க வழில போகட்டும். ஒரு கணவன் மனைவிக்கு ரொம்ப நாளா குழந்தை இல்லைன்னு வச்சுக்கிவோம். மருத்துவர் கருத்தரிக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்லீட்டார். அவங்க சோதிடத்த அணுகிறாங்க. அவங்க கிட்ட நான் போய் ஏங்க சோதிடத்தயெல்லாம் ஏன் நம்புறீங்கன்னு எப்படிச் சொல்ல முடியும். கொஞ்ச நாள் தான் உலகத்தில இருக்கப் போறோம். நமக்கு நம்பிக்கை
இருக்கிறத அணுகித்தான், தீர்வு வருதான்னு பார்ப்போமே! சோதிடத்தில சில வகைப் பாவங்களுக்குத்தான் பரிகாரம் கிடையாது. நிறைய சாதகக் குறைகளுக்கு பரிகாரம் உண்டு.

ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ளவங்களுக்கும் சாதகமெல்லாம் தேவையில்லை. பாடகர் யேசுதாஸ் சபரி மலைக்குப் போய் வந்த பின் தான் தனக்குப் பையன் பிறந்ததா சொல்லியிருப்பார்.

நுகர்வோர் புத்திசாலித்தனமா இருக்க வேண்டியது அவசியம். இந்த கணி காலத்தில நிறைய படிக்கக் கிடைக்குது. தெருல இறங்கி நடக்கிறதுக்கு சோதிடம் பார்க்கணும்னா பயித்தியம் தான்
பிடிக்கும். வாழ்க்கையில முக்கியமான விசயத்துக்கு மட்டும் சோதிடத்த அணுகணும்னு வைச்சிட்டு மத்த வேலய பார்க்க வேண்டியதுதான்!

அன்புடன்
சாம்

துளசி கோபால் Says:
April 18th, 2006 at 9:35 am
தருமி,

X - mark இருந்தா தப்புன்னுதானெ அர்த்தம்? நான்போய்
வாத்தியாருக்குச் சொல்லித்தரேன் பாருங்க

அதான் வெளிநாடு போகலை.

அது டிக் மார்க்கா இருந்தாத்தான் வெளிநாடு. இல்லேன்னா வெளியூர் போவீங்க.

அது சென்னையாவும் இருக்கலாம்

தருமி Says:
April 18th, 2006 at 8:47 pm
துளசி,
“அதான் வெளிநாடு போகலை…”//
- அதான் போய்ட்டு வந்துட்டம்ல (வைகைப் புயல் ஸ்டைல் போட்டுக்கங்க)

தருமி Says:
April 18th, 2006 at 8:50 pm
கொழப்புறீங்க கொழுந்து…

என் கேள்வி இன்னும் அந்தரத்தில நிக்குது…:”ஜாதகப் பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்கள், மற்ற சுப காரியங்களையும் எடுத்துக் கொள்வோம். அவைகளின்றி நடக்கும் அதே போன்ற திருமணங்கள், நல்ல காரியங்களையும் பார்ப்போம். என்ன வித்தியாசம் என்று நம்புவர்கள்தான் கூற வேண்டும்.”

கமல் Says:
April 18th, 2006 at 9:07 pm
//ஆனா ஒண்ணுங்க, கைரேகை சாஸ்த்திரம் இருக்கு பாருங்க. அதை நம்பலாம். நம்ம வாழ்க்கை நிகழ்ச்சியே இருக்கு.//

கைரேகை சாஸ்திரம்னா? நாடி ஜோசியமா? எப்படி பேர் கண்டு பிடிக்கிறாங்கங்கிற குழப்பத்தை நீங்களாவது தீர்த்து வையுங்களேன்!

நன்றி
கமல்

Sam Says:
April 18th, 2006 at 10:00 pm
//என் கேள்வி இன்னும் அந்தரத்தில நிக்குது…:”ஜாதகப் பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்கள், மற்ற சுப காரியங்களையும் எடுத்துக் கொள்வோம். அவைகளின்றி நடக்கும் அதே போன்ற திருமணங்கள், நல்ல காரியங்களையும் பார்ப்போம். என்ன வித்தியாசம் என்று நம்புவர்கள்தான் கூற வேண்டும்.” //

தருமி சார்,

இந்தியாவில இன்னும் திருமணம்ன்கிறது இரண்டு பேர்களுக்கு இடையில மட்டுமில்லாமா இரண்டு குடும்பங்களுக்கு இடையே பாலமாயிருக்கு. பின்னாடி சிக்கல் வந்தாலும் பேசாம
அனுசரிச்சுப் போங்கன்னு சும்மா சொல்லிட்டுப் போயிடுவாங்க. சாதகம் பார்த்துப் பண்ணும் போது பெண்ணையோ பிள்ளையையோ பார்க்காமலேயே இந்தத் திருமணம் எப்படி இருக்கும்ன்னு சொல்ல முடியும். இந்த சிக்கலை தவிர்ப்பது பெத்தவங்க பிள்ளைங்களுக்கு செய்யக் கூடிய
உதவி.
வாழ்க்கை எல்லா சந்தர்ப்பத்திலும் சீரா போகும்ன்னு உறுதியா சொல்ல முடியாது. கொஞ்சமோ,அதிகமோ தடுமாற்றம் வருமான்னு தெரிஞ்சுக்கதான் சோதிடம்.
எப்படிப் பொருத்தம் பார்க்கிறாங்க என்பது பத்தி பெரிய பதிவு எழுதணும்.
எங்கிட்ட ஒருத்தர் ஒரு சாதகத்தைக் காமிச்சு, அதுல எழு, பன்னிரண்டு, ஆறு எல்லாம் பாதிக்கப்பட்டிருந்துன்னா, உங்க வாரிசுக்கு வேற வரனைப் பாருங்க, மத்த காரணங்களுக்காக
அவசரப் படாதீங்கன்னு சொல்லீடுவேன்.

அன்புடன்
சாம்

தருமி Says:
April 19th, 2006 at 2:56 pm
:headbanger:

தருமி Says:
April 19th, 2006 at 3:20 pm
ஏன் இந்த ஸ்மைலியெல்லாம் வரவே மாட்டேங்குது :headbanger:
:yahoo:
:ATTACK:

Geetha Sambasivam Says:
April 19th, 2006 at 3:53 pm
நான் உங்கள் post script and the last but one para இரண்டையும் மூன்று நாளாகத் திரும்பத் திரும்பப் படித்தேன். இளைஞர்களின் மூட நம்பிக்கைக்குக் காரணம் தெரியவில்லை. மற்றவற்றிற்குத் தகுந்த பதில் இருக்கிறது. நான் நாளை வெளிஊர் போவதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும். பதில் நீளமாக இருக்கும் என்பதால் வந்து தருகிறேன்.

தருமி Says:
April 19th, 2006 at 10:28 pm
கொழுந்து சாம் சொல்றது என்னன்னா,

Hi Sam,

I didn’t get your response! If you take the horoscopes of say thirty married couples,
happily or not, and give it to an astrologer ( a good one ) to analyze, he will be able to tell you which one’s are happily married, which one’s have problems, and what kind of problems.
People who choose their spouses as in a love marriage, intuitively know that their partner is the right one for them.

People who have no faith in God, and people who have full faith in God, both create their own
reality within the framework of their Horoscope. People who seek advice are the one’s who
have faith in God, but also a need a second opinion and looking for remedies. These are
the people who do NOT want to play the Russian roulette with their lives.

Unfortunately there are astrologers who exploit the weakness in an average person for their personal gain, bring bad name for the study of horoscopes.

Hope this answers your question! If not please re phrase the question and I will try one more
time. I didn’t want to leave a lengthy response in English in Tamizmanam.

Regards
Sam

தருமி Says:
April 19th, 2006 at 11:31 pm
* சாதகம் பார்த்துப் பண்ணும் போது பெண்ணையோ பிள்ளையையோ பார்க்காமலேயே இந்தத் திருமணம் எப்படி இருக்கும்ன்னு சொல்ல முடியும்.அதத்தான் நான் மறுபடி மறுபடி கேட்கிறேன்; அப்படியெல்லாம் சொல்ல முடிந்தால் சாதகம் பார்த்து நடக்கிற கல்யாணங்கள் எல்லாமே ஓஹோன்னு இருக்கணுமே; இருக்கா?

* …தடுமாற்றம் வருமான்னு தெரிஞ்சுக்கதான் சோதிடம்.// அப்போ சாதகம் சோதிடம் பார்த்தால் தடுமாற்றங்கள் இல்லாம, ‘வண்டி’ நல்லா ஓடும் அப்டிங்கிறீங்க; இல்லையா? நடப்பில அப்படி இல்லையே, அய்யா!

* if you take the horoscopes of say thirty married couples,
happily or not, and give it to an astrologer ( a good one ) to analyze, he will be able to tell you which one’s are happily married, which one’s have problems, and what kind of problems. i may say that any good astrologer will not be able to say that. it is my word against yours; both of us say this based on our belief.

* ..bring bad name for the study of horoscopes.” just read what தொப்புளான் has said in his comment

தருமி Says:
April 19th, 2006 at 11:35 pm
கீதா சாம்பசிவம்,
இளைஞர்களின் மூட நம்பிக்கைக்குக் காரணம் தெரியவில்லை”//- நான்கூட ‘மூட’ என்று அவைகளை அழைக்கவில்லை என்று நினைக்கிறேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

bon voyage!

No comments:

Post a Comment