Friday, November 20, 2015

876. NUIT BLANCHE .... SLEEPLESS NIGHT ..... தூங்காவனம்








*




தூங்காவனம் படம் பார்க்க ஆசை. அதுவும் எந்தப் படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் சொல்லியாயிற்று. அதனால் திருஷ்யம் பார்த்து விட்டு, பாபநாசம் பார்த்தது போல் இதிலும் ஒரிஜினலை முதலில் பார்த்தாலென்ன என்று சொல்லி அந்தப் படத்தை இறக்கியாயிற்று.

பார்க்க ஆரம்பித்ததும் RR ரொம்ப பிடித்துப் போனது. ஆனால் எனக்கெல்லாம் ஆங்கிலப் படங்களைப் பார்த்தால் ஒரு மண்ணும் புரியாது. அதுக்கு இங்கிலீசு தெரியணுமாமே! அதனால் sub-ttile போட்டுப் படம் பார்ப்பதே பழக்கம். இந்தப் படத்தில் சப் டைட்டில் வரத் தகராறு பண்ணியது. ஆங்கிலமே அப்படியென்றால் இது பிரஞ்சு படம். ‘merci, tres bien, s'il vous plait, comment allez vous, respondez s'il vous plait மட்டும் தான் தெரியும். ஆனாலும் விடாமல் பார்த்தேன்.  படம் நல்லா போச்சு. வேகமாக படம் நகர்ந்தது. முழுவதும் பார்த்துத் தொலைத்த பின் தான் கதை சுத்தமா புரியலை என்பது புரிந்தது. மறுபடி சப் டைட்டில் தேடிப்பிடித்து மறுபடி படம் பார்த்தேன். அப்பாடா ... ஒரு மாதிரி புரிஞ்சிரிச்சி...

கெட்ட போலிசுகளும் ... நல்ல போலீசுகளும் ...

படம் ஆரம்பித்ததும் மிஸ்கின் நினைவு வந்தது. அவர் படத்திலும் தெருவில் கதை நடக்கும். ஆனால் கதை நாயகர்களைத்தவிர வேறு யாரும் கண்ணில் பட மாட்டார்கள். இங்கேயும் முதல் சீனில் ஹீரோ அம்புட்டு வேகமாக காரை ஓட்டிட்டு, ஆளுகள சுட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாரு. ஊர்ல, நாட்ல, தெருவில ஆளுகளே இருக்காது. ஒரே ஒரு ஆளு அதப் பார்த்ததாக பின்னாலில் ஒரு சீன்.

அம்புட்டு பெரிய க்ளப்பில் வாசலில் மட்டும் இரண்டே இரண்டு அடியாட்கள். உள்ளே நடக்கும் எதிலும் ஏன் secyrutyகளே வரவில்லை - அத்தனை அடிதடிக்குப் பிறகும்?

கிளப் கிச்சனை அடித்து நொறுக்குவார்கள். ஆனால் சாப்பாடு சப்ளை தொடர்ந்து மட்டும் எப்படி நடக்குதுன்னு தெரியலை.


ஹீரோவை ஆளுக விரட்டிக்கிட்டு வருவாங்க. மெயின் ஸ்விட்சை ஆப் பண்ணிட்டு, இருட்டுக்குள்ள தன் மூஞ்சுக்கு மட்டும் செல் போன் லைட்ட அடிச்சிக்கிட்டே ஹீரோ போவாரு. நமக்கு தெரியணும்ல ... அதுக்காக இருக்கும்!

ஆளுகள சும்மா சும்மா ஷூட் பண்ணிட்டு தேவையில்லாம கொன்னுட்டுப் போவாங்களே ... அது மாதிரி இல்லாம கால்ல ஷூட் பண்ணிட்டு போனா என்னன்னு அடிக்கடி சினிமா பார்க்கும் போது நினைப்பேன். அப்பாடா ... அந்த சீன் இந்தப் படத்தில் வந்திருச்சி.

அங்கேயும் வீடு ஓட்டையா இருக்கே. அம்புட்டு பெரிய கிளப்ல மேல ஒருந்து தண்ணி சொட்டு சொட்டா ஒழுகுது. நம்மள மாதிரி கீழே ஒரு டப்பா வச்சி தண்ணி பிடிக்கிறாங்க. மழைக்காலத்துல பார்த்ததுனாலேயோ என்னவோ ... அது நல்லா இருந்தது. ஆனா எதுக்கு அந்த எபெக்ட் அப்டின்னு புரியலை!

இன்னொரு பெரிய சந்தேகம். இந்தப் படத்திலும் சரி... furious மாதிரி படங்களில் கார்கள் மொங்கு .. மொங்குன்னு மோதி விழும். ஆனாலும் ஒரு கார்லேயும் air-bags இருக்காதா? அத ஒரு படத்திலேயும் பார்த்த ஞாபகமே இல்லையே!

ஹீரோவுக்கு விலாவில சரியான கத்தி வெட்டு. அதோட சண்டை..கிண்டை எல்லாம் போடுவார். ஓடுவார். ஒரு சீன்ல அந்தப் புண்ணுக்கு மருந்து போட்டுக்குவார். அப்போ வலியில் கத்தாமல் வலியில் துடிப்பது போல் நன்றாகச் செய்திருப்பார். அந்த சீனை கமல் எப்படி செய்திருப்பார் என்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

சீக்கிரம் பார்க்கணும் ........






 *

Tuesday, November 17, 2015

875. BELIEVERS SHOULD LISTEN ...........Stephen Fry Annihilates God



Monday, November 16, 2015

874. THANK YOU GUYS....... I APOLOGIZE.......







*


 ........இப்படி ‘மசாலா’ படங்களாக என்னும் எத்தனை காலத்திற்குத்தான் பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோம். ஆங்கிலத்தில் சொல்வார்களே -genre - என்று அது போல வகைப்படுத்தப் பட்ட படங்களைப் பார்க்கும் காலம் வரவே வராதா? நம் இந்தியப் படங்களில்தான் இப்படி ‘எல்லாமும்’ சேர்ந்த சினிமாக்கள் வருகின்றன. action, thriller, musical, mystery, suspense, western, war stories என்று எத்தனை வகைகள் மற்ற எல்லா மொழிப் படங்களிலும் இருக்க நம்மூர்ல மட்டும் ஏன் இப்படி ஒரே வகைப் படங்கள் வந்து தொலைகின்றன. 

.......... இப்படியெல்லாம் நான் பத்து ஆண்டுகளுக்கு முன்  பாடிய பிலாக்கணம் இங்கே இருக்கிறது. நடக்கவே நடக்காது என்ற தமிழ்ப்பட உலகத்தில் பெரும் மாற்றம் நடந்து வருகிறது. மகிழ்ச்சி.

காதல் கண்றாவி தவிர ஏதும் இல்லாமல் இருந்த தமிழ்ப்பட உலகில் சமீபத்தில் வந்த நல்ல படங்களை என் மதிப்பீட்டு வரிசையில் தந்துள்ளேன்.

குற்றம் கடிதல் பிரம்மா -  காக்காமுட்டை படத்திற்கு ஊடகங்களில் கிடைத்த அளவிற்கு இப்படம் கவனிக்கப் படவில்லையே. ஏன்?

காக்கா முட்டை மணிகண்டன் 

ஆரண்ய காண்டம் 2010 கூத்துப்பட்டறை சோமசுந்தரம் என்றொரு புது முகம் என்னமா நடித்தார்! அதன் பின் ஆளே காணோமே. மறுபடி இயக்குனர் குமாரராஜா படத்திலாவது வருகிறாரா என்று பார்ப்போம். அட... குமாரராஜாவையும் காணவேயில்லையே!

பீட்சா கார்த்திக் சுப்புராஜ் இவர் யாரென்று தெரிவதற்கு ஓராண்டிற்கு முன்பே அவர் எடுத்த the last train  என்ற குறும்படத்தை எனது ப்ளாக்கில் போட்டிருந்தேன். அர்த்தமுள்ள படம்.

சூது கவ்வும் நளன் குமாரசாமி .  இதில் வந்த ஒல்லிப்பிச்சான் ரமேஷ் திலக் கனா காணும் காலங்களில்  கேபிள் ஷங்கரோடு வந்த முதன் முதல் சீனிலேயே பிடித்துப் போயிற்று.

அழகர்சாமி குதிரை (கதை மூலம், பாஸ்கர் ஷக்தி)   சுசீந்திரன்

இன்று நேற்று நாளை திருப்பூர் ரவிக்குமார் 

ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜ்

கோலி சோடா விஜய் மில்டன் 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்- பாலாஜி தரணிதரன்


இந்த இயக்குனர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

தொடருங்கள்..............

Thursday, November 12, 2015

873. I.S.L. 2015. ......(2) & மூன்று விஜய் சீரியல்கள்







*



 என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.. தலையே சுத்துது. காரணம் - எல்லா அணியும் ரொம்ப நல்லா விளையாடுறாங்க. clear picture கிடைக்கலைன்னு சொல்வாங்களே அப்படித்தான் இருக்குது! ஒரு வேளை செமி பைனல் ரவுண்டுகள் வித்தியாசமா இருக்கலாம். ஆனாலும் அதுக்கு எந்தெந்த அணி வரும்னு தெரியலை. ஏன்னா எல்லா அணிகளும் நல்லா விளையாடுறதுனால ரிசல்ட்கள் எல்லாம் கோக்கு மாக்கா இருக்கு.

 பாருங்களேன் ... கோவா அணி பெரிய அணிகளில் நான் வச்சிருந்தேன்.  ஆனா நம்ம சென்னை டீம் கூட விளையாடி 0:4ன்னு தோத்து நின்னாங்க. முதல் லீக்கில் நடுவில் இருந்த சென்னை அணி கடைசியில் இருந்த வடகிழக்கு அணிட்ட ரெண்டு கோல் வாங்கி தோத்தாங்க. ஆனா புனே அணி டாப்ல இருந்தப்போ நம்ம சென்னை அணி 1:2 என்று வென்றது. இப்படி நடந்தா தலை சுத்தாதா?

முந்தா நாள். 10ம் தேதி. இரண்டாம் லீக்கில் கேரளா அணியும் கல்கத்தாவும் மோதின. நினைத்துப் பார்க்க முடியாத கூட்டம். கொச்சின் மைதானம். 60,276ன்னு நினைக்கிறேன். அம்புட்டு கூட்டம் ...அதுவும் புட்பால் விளையாட்டுக்கு! கட்டாயம் கேரளா ஜெயிச்சிடும்னு நினச்சேன். விளையாட்டும் மகா தீவிரம். ஆனால் கடைசி நிமிடங்களில் 2:3 கல்கத்தா அணி ஜெயிச்சிருச்சி.

அதென்னமோ நிறைய விளையாட்டுகளில் கடைசி பத்து நிமிடங்கள் கதையவே மாத்தியிருது. நேத்து. 11ம் தேதி. சென்னையில் விளையாட்டு. சரியான மழை நடுவில். சென்னையும்,வ.கி. அணியும். 62% பந்து நம்ம கையில் ... ஐ மீன் .. காலில். ஆனால் இதிலும் மிகக் கடைசி நிமிடத்தில் சென்னைக்கு இரண்டாவது கோல் விழுந்தது. 1:2

சென்னைக்கு இன்னும் மூணு ஆட்டம் இருக்கு. எல்லாம் ஜெயிச்சா வரும், செமிக்கு சென்னை வருமோ... வராதோ...?


 ***********




இன்னைக்கி மேட்ச் இல்லை. அப்போ அந்த ரெண்டு சீரியலையும் பார்த்திரலாம் - விஜய் டிவியில். ஆனால் இந்த இரண்டு சீரியலுக்கும் நடுவில் ஒரு சீரியல் வருது பாருங்க .... கடவுள் தந்த வீடு  - அதுக்கு நான் வச்சிருக்கிற பெயர் - சைத்தான் கி கர்.  நிறைய கன்னாபின்னான்னு நகை போட்டுக்கிட்டு மகா கொடூரமா மூணு பொம்பிளைங்க வருவாங்க. கண் கொள்ளாக் காட்சி. அதிலும் நான் இதுவரை பார்த்த - முழுசாகவோ, அரைகுறையாகவோ - சீரியல்களில் இது போன்ற ஒரு முட்டாள்தனமான சீரியல் எதுவும் இல்லை. அட ... மடிக்கணினியை சோப்பு போட்டு சுத்தமா கழுவி வைக்கிற கதாநாயகில்லாம் இதில் உண்டு. ஆனா இந்த சீரியலில் நடிச்ச நிறைய பேருக்கு விஜய் அவார்ட் எல்லாம் கொடுத்தாங்க. (பாவம்,, சரவணா சீரியலில் வர்ர வில்லன் பாண்டிக்கு கொடுக்காம ஒரு பொம்பளைக்குக் கொடுத்தாங்க.) இந்த லட்சணத்தில் இந்த சீரியல் இந்தி, மலையாளத்திலும் ஓடுதாம். நம்மளை விட மலையாளத்துக்காரங்க பெட்டர்னு நினச்சிருந்தேன். அப்படியெல்லாம் இல்லை போலும். அவங்களும் நம்மள மாதிரி தர்த்திகள் தான் போலும்.

ஆனாலும் இந்த ஒரு சீரியலைப் பற்றி மட்டும் சொல்லிட்டா போதுமா? ஆண்டாள் அழகர்னு ஒரு சீரியல். ஒண்ணு இரண்டு வாரத்துக்கு முன்னால் அந்த சீரியலை வீட்ல சென்சார் பண்ணிட்டாங்க. என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் அதைப் பார்க்கக் கூடாதுன்னுட்டாங்க. ஒரு ஜோடி “அது” & “இது”ன்னு ”அதப்பத்தி” அசிங்கமா தொடர்ந்து பேசிக்கிட்டே இருந்தாங்களாம்.

ஆரம்பத்தில சரவணன் மீனாட்சி ரொம்ப பிடிச்சிது. காரணம் என்னன்னா ....நிறைய நல்ல விஷயங்களைக் காண்பிச்சாங்க.  வரதட்சணை கிடையாது; நல்ல நாள் பார்க்கிறது கூடாது; ஜாதகம் பார்க்கக் கூடாது; பெண்ணின் பழைய காதல் - அது infatuationஆக இருக்கலாம் - அதையெல்லாம் தாண்டும் கதாநாயகன்; இப்படி நிறைய பாசிட்டிவ் பாய்ண்டுகள் இருந்திச்சி. இப்போ கழுதை தேஞ்ச கட்டெறும்பா போச்சு. வேற வேற டைரடக்கர்களாம்!

sorry directors ...... கொஞ்சம் தேறப் பாருங்க’ப்பா ..........

Tuesday, November 03, 2015

872. I.S.L. 2015








*






 I.S.L. 2014 அதிகமாகவும் பார்க்கவில்லை. அந்த அளவு அப்போது ஆர்வமில்லாமல் போனது. ஆனால் இந்த லீக் விளையாட்டுகளில் கண்ணில் தென்படுமளவிற்கு கால்பந்து விளையாட்டு அங்கங்கு கண்ணில் படுகிறது மகிழ்ச்சியளிக்கிறது. ஏதோ சினிமாக்காரர்கள், கிரிக்கெட் விளையாட்டுவீரர்கள் தயவில் கால்பந்து விளையாட்டும், கபடியும் தொலைக்காட்சிகளில் வருகின்றன. பெரிய அதிசயம் தான். கால்பந்து விளையாட்டுன்னு ஒண்ணு இருக்குன்னு சின்ன வயசு பிள்ளைகளுக்கும் தெரிய வந்திருக்கு. தொடரட்டும்.

கால்பந்து பார்ப்பதில் ஒரு குறை  எனக்கு. யார் பெயரும் தெரியவில்லை. வெளியூர் ஆட்டக்காரர்கள் மட்டுமல்ல... நம்ம ஆளுகளும் யாரும் தெரியவில்லை. பரிச்சயமில்லாத முகங்கள் ... யார் யார் எப்படி விளையாடுவார்கள் என்பதும் தெரியாமல் ஆட்டத்தைப் பார்ப்பதில் விறுவிறுப்பு மிகவும் குறைந்து விடுகிறது.  பெயர் தெரிந்த விளையாட்டுக்காரர்களும் இணைந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

சென்ற ஆண்டு எப்படி இருந்ததோ... இந்த ஆண்டில் ஒவ்வொரு அணியிலும் ஆடுபவர்களில் ஐந்து பேராவது நம்மூர் பசங்களா இருக்கணும்னு ரூல் இருக்கு. தெரிந்தவர்களோ தெரியாத முகங்களோ விளையாட்டு நன்றாக போகின்றன. ஆனால் எதிர்பார்ப்புகள் மாறி மாறி நடக்கின்றன.

விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன் கல்கத்தா, கோவா, கேரளா அணிகள் நன்றாக விளையாடும் என்று நினைத்திருந்தேன். அதோடு நம்மூர் என்பதால் சென்னை அணியையும் எதிர்பார்த்திருந்தேன். அதில் முதல் குண்டு முதல் நாள் முதல் ஆட்டத்திலேயே நடந்தது. சென்னைக்கு விழுந்த முதல் கோல் very unlucky goal. கோல் கீப்பர் பந்தைப் பிடித்து விட்டார். ஆனால் அவர் மேலும் பந்தின் மேலும் ஒரு டிபன்ஸ் ஆட்டக்காரர் விழுந்து தொலைக்க, பந்து நழுவி கோலுக்குள் சென்றது. ஆனாலும் அடுத்து இரு கோல்கள் விழுந்தன. முதல் கோல் இல்லாமல் இருந்திருந்தால் முதல் ஆரம்பம் 2:2 என்று சரியாக ஆரம்பித்திருக்கும்.  சரி...சென்னையைக் கழுவி ஊத்தி விட்ற வேண்டியது தான்னு நினைச்சேன். ஆனாலும் துளிர் விட்டுடிச்சி.

நான் நினைத்த நாலு அணிகளையும் விட புனே அணி நன்றாக வென்று கொண்டு வந்தன. கேரளா அணி கீழே போய்க்கொண்டிருந்தது. அதிக ஏமாற்றம் North east அணி தான். எழுந்திருக்கப் போவதில்லை என்று தெரிகிறது.

தெரிந்த இரண்டே இரண்டு கோச் நம்ம ஆளு கார்லோஸ். மும்பை அணியை நடத்துகிறார். இன்னொருவர் சிக்கோ. இருவரும் ப்ரேஸில் காரர்கள்.

இனி வரும் மோதல்கள் இன்னும் நன்றாக இருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து பார்க்கணும் - டாக்டரும் சொல்லிட்டார்ல ....


 *

871. A STARING TIGER










*




Jessica, my granddaughter  had been to Madurai for just three days. When she reached home I asked her whether she brought any new pictures to me. She said, ‘No’. I acted furious and then left home for an hour or so. When I came back she was ready with this pix. A towel was hanging in a nearby chair and a tiger was staring at me from it.







No eraser. No pencil. Just a scribbling with a sketch pen.


 … MY PICASSO….. !






 *