Sunday, December 13, 2015

877. I.S.L. ... 2015 .. 4




*


என்னென்னவோ நடந்துகிட்டுஇருக்கு ...

முதல் லீக்கில் கடைசியில் இருந்த சென்னையின் அணி அரையிறுதிக்கு வந்திருச்சு... டாப்ல இருந்த புனே அணி காணாமப் போயிருச்சு. கட்டாயம் வரும் என்று நினைத்திருந்த கேரளா அணி தோத்துப் போச்சு. 50 ஆயிரம் பேருக்கு மேல் கேரளாவில் விளையாட்டு பார்க்கக் கூட்டம் வந்துச்சு. ஆனால் தில்லியில் அரையிறுதிக்கே 6ஆயிரம் பேர்தான் - தில்லி அணி விளையாடியும் -  பார்க்க வந்திருக்கிறார்கள். இதுவே ஒரு பெரிய நகை முரண். இதிலும் எதிர்பார்ப்புக்கு மாறாக தில்லிதான் வெற்றி பெற்றுள்ளது 1:0. இதிலும் நான் எதிர்பார்த்த கோவா ஒரு கோல் வாங்கித் தோற்றது. பார்ப்போம் - இரண்டாவது ஆட்டத்தில் என்ன நடக்கிறதென்று.

சென்னையில் X கொல்கத்தா அணியின் முடிவும் வித்தியாசமாக இருந்தது. இரண்டு லீக் ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி சென்னையை வென்றது. இப்போட்டியில் மூன்றாவது முறையாக இந்த இரு அணிகளும் களம் இறங்கும்போது கொல்கத்தா அணி வெல்லும் என்று தான் நினைத்தேன். ஆனால் பந்து சென்னையிடமே அதிகம் இருந்தது. 3:0 என்று  முடிவு வந்ததும் ஒரு ஆச்சரியம் தான். இனி இரண்டாம் ஆட்டத்தில் 3 கோலை முறித்து கொல்கத்தா வெல்வது மிகவும் கஷ்டம் என நினைக்கிறேன்.

பார்க்கலாம் ..........






*




No comments:

Post a Comment