Wednesday, December 20, 2017

960. அருவி





*






முதல் பட இயக்குனருக்கு இருக்கும் திறமை அதை விட அவரது துணிவு மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. அதே போல் ஆண் நடிகர்கள் தங்கள் உடம்பை கதைக்கேற்ப மாற்றுவது போல் கதைக்காக உடம்பை மாற்றிய கதாநாயகியின்  ஈடுபாடும் பாராட்டுதலுக்கு உரியது.


கதாநாயகனின்றி ஒரு தமிழ்ப்படம் – நான் மிகவும் ஆச்சரியப்பட்ட ஒன்று. இந்த தைரியத்திற்காகவே இயக்குனருக்கு என் பாராட்டுகள். இன்னும், ரசிகர்கள் பாட்டு, டான்ஸ் வேண்டுமென்று ”ஒத்தைக் காலில்” நிற்கிறார்கள் என்று வழக்கமாகச் சொல்லும் பெரிய டைரடக்கர்கள் இந்தப்படம் பார்த்தாவது தங்கள் முட்டாள்தனத்தை மாற்றிக் கொள்ளட்டும்.

அருவியின் வாழ்க்கை மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது. பொங்கிப் பிரவாகமெடுக்கும் முதல் இளம் பகுதி அழகுப் பகுதி. பெற்றோரின் அன்பணைப்பில் வளரும் சிறு பெண் – பேதை. இப்பகுதியில் காமிரா தனித்து நிற்கிறது.  பிள்ளையும் அழகு; அதன் அப்பாவும் அழகு. அடுத்து  பட்டணத்து வாழ்க்கைக்கு மாறி உயரத்திலிருந்து கொட்டும் நீராக அடுத்த பகுதி – மடந்தை. கடைசியில் வரும் துன்பயியலில் வாடும் பேரிளம் பெண்.


பலவகையில் எதிர்பார்க்காத பல நிகழ்வுகளைப் படத்தில் பார்க்க முடிகிறது. முதல் பாதி ஏதும் பெரிதாகத் தெரியவில்லையே என்ற நினைப்போடு இரண்டாம் பாகம் உட்கார்ந்ததும் வித்தியாசமான நகைச்சுவைப் படம் போல் விரிந்து, இறுதியில் சோகச் சித்திரமாக மனதை உருக்கியது. நகைச்சுவை வலிந்து திணிக்கப்படாமல் காட்சிகளோடு ஐக்கியமாகி மிக இயற்கையாக இருந்தன. நல்ல நகைச்சுவை உணர்வு விரவி இருந்தது.

இதற்கு முன் மோகன்லால் படம். பெயர் ஞாபகத்தில் இல்லை.( சரித்திரம் என்ற படமோ?) முக்கால் வாசிப் படம் நகைச்சுவையோடு செல்லும்.

கடைசிப் பகுதி நெஞ்சைப் பிசைந்து விடும். இப்படமும் அது போல் நகைச்சுவை … சிரித்துக் கொண்டே இருந்து விட்டு… அவலப் பதிவிற்குள் இழுத்துச் செல்லப்படுகிறோம். அதனாலேயே பரிதாபத்திற்குரிய அருவியோடு இணைந்து விடுகிறோம்.

அலட்டிக் கொள்ளாமல் நேர்காணலில் இருக்கும் இயக்குனர் அருண் மீது நன்கு மரியாதை கூடுகிறது. வரும் படங்களில் இதே தரத்தை அவர் தர வேண்டும். கதாநாயகிக்கும் பாராட்டுகள்.


*****

தமிழ்ப்படங்களில் நடுவே வரும் பாட்டுகளின் வரிகளோ, பொருளோ பொதுவாக என் புத்திக்கு எட்டுவதில்லை. வீடியோ இல்லாமல் கேட்கும் போது மட்டும் தான் பாட்டு என் மண்டைக்குள் சிறிதாவது ஏறுகிறது. பொருளும்கொஞ்சமாவது புரிகிறது இது எனக்கு மட்டும் தானா…? 

இதனால் சினிமாவில் நடுவில் வரும் பாட்டுகள் – நல்ல பாட்டுகளாக இருந்தாலும் – எனக்கு எரிச்சலை மட்டுமே தருகின்றன. அதிலும் இப்படத்தில் அதிலும் ஒரு சிறிது வித்தியாசம் இருந்தது. குக்காட்டி குனாட்டின்னு ஒரு பாடல் …அது மட்டும் வித்தியாசமாக ஒலித்தது.





*









Friday, December 08, 2017

958. கடவுள் என்னும் மாயை - அட்டைப்படம்





*


 வெளியீட்டாளரிடமிருந்து என் இரண்டாம் நூலின் அட்டைப்படம் - இரு பக்கமும் - இன்று வந்தது.





.


 சென்னை புத்தக விழாவில் வெளி வருகிறது. 
ஜனவரி 18, 5 - 15











 *

Monday, December 04, 2017

957. BIBLE STUDY - பழைய ஏற்பாடு .... 5






*
பழைய ஏற்பாடு

1. தொடக்க நூல்


இஸ்ரயேல் மக்களின் வரலாற்றை மனித இனத்தின் தோற்றத்துடன் இணைத்துக் காட்டுகின்றது. – எல்லா மதங்களுமே அம்மதங்கள் தோன்றிய ஒரு குறிப்பிட்ட இடத்தையும், அதன் சாதி சனத்தையும் தான் மய்யப் புள்ளியாக வைத்து கற்பனையின் அடிப்படைகளில் எழுதப்பட்டவை என்ற என் விவாதத்திற்கு உரம் சேர்க்கிறது மேற் சொன்ன வரிகள்: ஒரு குறிப்பிட்ட மக்களின் வரலாறே இங்கு ஒரு மதமாக உருவெடுக்கிறது..

கடவுள் மனைதன் மேல் தொடர்ந்து கனிவு காட்டுகிறார் என்று இந்நூல் வலியுறுத்துகின்றது.  இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் இவை; ஆனால் வாசித்துப் பார்த்தால் நோவாவை மட்டும் விட்டு விட்டு மற்ற உயிரனங்கள் அனைத்தையும் தண்ணீரால் இந்தக் கடவுள் அழித்தொழித்ததையும், பின்பு இது போல் இனி செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு அதன் பின் நெருப்பால் சோதோம், கொமோராவினை அழிக்கிறார். தான் கொடுத்த உறுதிமொழியைக் கடவுள் இப்படியாக முறியடிக்கிறார் நியாயாவதியான கடவுள்! இந்தப் பகுதியில் கடவுளை ஒரு “அழிக்கும்” கடவுளாக மட்டுமே பார்க்க முடிகிறது. ஆனால் இந்த நூலில் கடவுள் கனிவு காட்டுகிறார் என்று கூறப்பட்டுள்ளது வேடிக்கையாகத்தான் உள்ளது.


கடவுள் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து, அவர் தம் வழி மரம்பினர் வரலாற்றில் தாமே செயல் பட்டுமீட்புப் பணியைத் தொடர்ந்தாற்றுகிறார் என்று இந்த நூலின் துவக்க உரை கூறுகிறது.


                                             ***



விவிலியத்தில் வரும் சில வசனங்களும், 
என் கேள்விகளும்

1: 16   கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார்.
பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும்,
இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும்
மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
எனது கேள்வி:  இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பு ..அது என்ன? நிலவையா சொல்கிறார்கள்?ய்

1:30   – பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன் என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
2:5    --    வயல்வெளியில் எவ்விதச் செடியும்;முளைத்திருக்கவில்லை.

எனது கேள்வி: முதலில் ‘அவ்வாறே ஆனது” ஆனால் இரண்டாம் வசனத்தில் எவ்வித செடியும் முளைத்திருக்கவில்லை.????


நோவா வெள்ளப் பெருக்கின் முடிவில் …

7:23   மண்ணில் உயிர் வாழ்ந்த அனைத்தும் அழிந்தன.  .. நோவாவும் அவருடன் பேழையில் இருந்தவர்களுமே எஞ்சி இருந்தனர்.


நோவா பலி செலுத்திய பிறகு …
8: 20, 21   மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்க மாட்டேன் . … இப்போழுது நான் செய்தது போல் இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்.


என் கேள்வி:  எல்லாவற்றையும் அழித்தவர் தனது இரண்டாம் யோசனையில்  (on second thoughts) இனி இப்படியெல்லாம் செய்ய மாட்டேன் என்று ஒரு சபதமெடுக்கிறார். மனித சிந்தனை போலவே உள்ள ஒரு கற்பனை இது.


9: 11   நோவா வெள்ளப் பெருகிற்குப் பின் …
சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது
.
அப்படியா? உடைக்கப்படுவதற்காகவே உறுதிமொழிகள் மனிதர்களால் மட்டுமல்ல கடவுளாலும் கொடுக்கப்படுகிறது போலும்!


17: 10, 11  உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும். …இதுவே உங்களுக்கும் எனக்குமிடையே உள்ள உடன்படிக்கையின் அடையாளம்.

எப்படி ஏற்பாட்டில் கூறப்பட்ட ஒரு கட்டளை கிறித்துவத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டது.


19: 5 (சோதோமின் தீச்செயல் என்ற தலைப்பில் வரும் ‘கதை’ மிகவும் விரசமான ஒன்றாக உள்ளது.) லோத்தைக் கூப்பிட்டு, “இன்று இரவு உன்னிடம் வந்த ஆடவர் எங்கே? நாங்கள் அவர்களோடு உறவு கொள்ளுமாறு அவர்களை எங்களிடம் கொண்டு வா” என்றனர். 

இதற்கு லோத் ஆண் தொடர்பில்லாத தன் இரு புதல்வியரை அதற்குப் பதிலாகத் தயாராக இருக்கிறார். மிக மட்டமான கதை. இந்துப் புராணங்களைப் பார்த்து கிறித்துவர்கள் முகம் சுழிப்பதுண்டு. இக்கதை பற்றி எத்தனை கிறித்துவர்களுக்குத் தெரியுமோ… தெரிந்த கிறித்துவர்கள் இதற்குக் கொடுக்கும் விளக்கம் என்னவோ?!


19: 12-22 சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. என்று 9:11ல் கடவுள் வாக்களித்தார். ஆனால் இங்கு நெருப்பால் சோதோம், கொமோராவினை நெருப்பினால் அழிக்கிறார்.

எதற்காக அழிக்கிறார்… ஏன் அழிக்கிறார் போன்ற கேள்விக:ளைக் கேட்பதே விரையம் தான். இதெல்லாம் கடவுளுக்கு just like that மட்டும் தான் போலும். அதே போல் அவர் அழித்ததைத் திரும்பிப் பார்த்ததால் பாவம் அந்த லோத்தின் மனைவி. உப்புத்தூணாக மாறினாள். எல்லாம் நம் அகல்யா கதை போல் இங்கு இன்னொரு கதை. புராணங்களின் அடி மட்ட அழுக்குகள்!

இதன் பின் வரும் ஆபிரகாமின் கதை அடுத்த ஒரு மிகக் கேவலமான கதை. (முந்திய பதிவில் அதைப் பற்றி எழுதியாகி விட்டது. 20 அதிகாரம்.)


47: 22  அர்ச்சகர்களின் வயல்களை மட்டும் அவர் வாங்கவில்லை. ஏனென்றால், பார்வோன் அவற்றை அவர்களுக்கு மானியமாகக் கொடுத்திருந்தான்.


ஊருக்கு ஊர் இதே கதை தான் போலும். அர்ச்சகர்கள் என்றாலே மானியம் தானா?



  *